உலகம்
பிரான்ஸ் தேசிய நூலக நிர்வாகிகளுக்கு அழைப்பு! : அமைச்சர் அன்பின் மகேஸ் பொய்யாமொழி தகவல்!
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழ்நாட்டின் கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியப் பெருமக்களை அழைத்துக்கொண்டு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பிரான்ஸ் நாட்டிற்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 25ஆம் நாள், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் தலைநகரில் அமைந்துள்ள “புரட்சி சதுக்கம்” என அழைக்கப்பட்ட மிகப்பெரும் பொது சதுக்கத்தை பார்வையிட்ட ஆசிரியர்கள், இன்று (அக்டோபர் 27) பிரான்ஸ் நாட்டில் உள்ள பழமையான தேசிய நூலகத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன் பார்வையிட்டனர்.
இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ், தனது X வலைதள பக்கத்தில், “தமிழ், கிரேக்கம், அரபி போன்ற தொன்மையான மொழிகளின் 5000 ஓலைச்சுவடிகளைக் கொண்டுள்ள இந்நூலகம் நவீன தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டுள்ளது.
2300க்கும் அதிகமான பணியாளர்களின் உதவியுடன் செயலாற்றும் இந்நூலகம் பிரான்ஸ் நாட்டின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.
இந்த நூலகத்தின் நிர்வாக அலுவலர்களிடம் தமிழ்நாட்டின் அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் பற்றி எடுத்துரைத்து தமிழ்நாட்டிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தோம்” என பதிவிட்டுள்ளார்.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!