உலகம்
தைவானை சுற்றி வளைத்து தாக்க திட்டம் : சீனாவின் போர் பயிற்சியால் தென் சீன கடல் பகுதியில் போர் பதற்றம் !
இரண்டாம் உலகப் போரின்போது , சீனாவை ஆண்டு வந்த கோமிங்டாங் கட்சிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே உள்நாட்டு போர் ஏற்பட்டது. இதில் கோமிங்டாங் கட்சியை அமெரிக்கா போன்ற நாடுகள் ஆதரித்த நிலையில், மக்கள் ஆதரவு காரணமாக அந்த போரில் சீன கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற்றது.
கம்யூனிஸ்டுகளின் இந்த வெற்றியைத் தொடர்ந்து கோமிங்டாங் கட்சியின் தலைவர் சியாங் காய்-ஷேக் தலைமையில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் சீனாவுக்கு அருகில் இருந்த தைவானுக்கு தப்பிச்சென்றனர். தொடர்ந்து நாங்கள்தான் உண்மையான சீனா என கோமிங்டாங் கட்சியினர் கூறிக்கொள்ள, சீனாவின் 90% நிலத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியும் நாங்களே உண்மையான சீனா என்று கூறியது.
ஆரம்பத்தில் உலகின் பெரும்பாலான நாடுகள் தைவானை உண்மையான சீனா என அங்கீகரித்த நிலையில், காலால் செல்ல செல்ல சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான சீனாவை அங்கீகரிக்க தொடங்கின. தற்போதைய நிலையில், தைவானை உலகின் 14 நாடுகள் மட்டுமே அங்கீகரித்துள்ளன. அமெரிக்கா கூட இன்னும் தைவானை அங்கீகரிக்கவில்லை.
இந்த சூழலில் தைவானை ஆக்கிரமித்து தனது நாடோடு சேர்க்க ஆரம்பத்தில் இருந்து சீனா முயற்சி செய்து வருகிறது. அதிலும் சமீபத்தில் தைவானை சுற்றி ஏராளமான ராணுவ பயிற்சிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இரு நாட்களுக்கு முன்னர் தைவான் ஜலசந்தி, தைவானின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சீன ராணுவம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டது.
தைவானை சுற்றிவளைத்து அதனை கைப்பற்றும் வகையில் இந்த பயிற்சி அமைந்ததாக ராணுவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் போர் நடவடிக்கைகள் பகுத்தறிவற்ற ஆத்திரமூட்டும் செயல் என தைவான் விமர்சித்துள்ளது. சீனாவின் இந்த செயலால் அந்த பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!