உலகம்
கிர்கிஸ்தானில் வெடித்த வன்முறை : குறிவைக்கப்படும் வெளிநாடு மாணவர்கள் : இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை !
மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கிர்கிஸ்தானில் ஏராளமான தெற்காசிய மாணவர்கள் மருத்துவம் தொடர்பான படிப்புகளை படித்து வருகின்றனர். அதில் இந்தியர்களே அதிகமானவர்கள் என்று கூறப்படுகிறது. இந்திய அரசின் தகவலின்படி 14 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் அங்கு படித்து வருகின்றனர்.
இங்கு கடந்த இரண்டு நாளுக்கு முன்னர் தலைநகர் பிஷ்கெக்கில் வெளிநாட்டு மாணவர்களைக் குறிவைத்து வன்முறை வெடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தெற்காசிய நாடுகளை சேர்ந்த மாணவர்கள் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
மாணவர்கள் வசிக்கும் விடுதிகளைக் குறிவைத்து சில கும்பல்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியாக புகார் எழுந்தது. இது குறித்து விளக்கமளித்த கிர்கிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம், "இந்த வன்முறையைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு .
வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் வன்முறையில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறையில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் காயமடையவில்லை"என்று கூறப்பட்டிருந்தது.
இதனிடையே கிர்கிஸ்தானில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடைபெற்று வருவதாக சமூக ஊடகங்களில் புகைப்படங்களும் வீடியோக்களும் பரவி வருவதையடுத்து, இந்திய தூதரகம் 0555710041 என்ற உதவி எண்ணை அறிவித்துள்ளது. மேலும் , மாணவர்கள் வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கும் படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
Also Read
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிந்து சமவெளி நாகரிகத்தை திரிக்கும் மதவெறி அமைப்பு : செந்தலை ந.கவுதமன் கண்டனம்!