உலகம்
Press Meet-ன் போது கழுத்தில் கத்தியால் குத்திய நபர் : ஆபத்தான நிலையில் தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் !
தென்கொரியாவின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவர் லீ ஜே மியுங். இவர் கடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிட்டார். அந்த தேர்தலில் தற்போதைய அதிபர் யுன் சுக் இயோலிடம் தொலைவியைத் தழுவினார்.
அதனைத் தற்போது தற்போது தென் கொரியாவின் எதிர்க்கட்சி தலைவரான இருக்கும் லீ ஜே மியுங் துறைமுக நகரமான பூசானுக்கு வருகை வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அங்கு நின்ற நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லீ ஜே மியுங் மீது பாய்ந்து அவரின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனிடையே அங்கிருந்த காவலர்கள் கத்தியால் குத்திய மர்ம நபரை கைது செய்தனர். இதனிடையே இது குறித்து வீடியோ வெளியாகி அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லீ ஜே மியுங் குறித்த புகைப்படத்தை ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.
அதில், லீ ஜே மியாங் கண்களை மூடிக்கொண்டு தரையில் படுத்திருக்கும் நிலையில், அவரைச் சுற்றியுள்ள மற்றவர்களை அவரின் ரத்தம் வெளியாகும் இடத்தை அழுத்தி பிடித்திருக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு அந்நாட்டின் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
Also Read
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ்-க்கு என்ன ஆனது? : ICU-ல் சிகிச்சை!
-
சென்னையில் 4.09 லட்சம் பேருக்கு உணவு! : தமிழ்நாடு அரசின் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
-
பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் : களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தி.மு.க - காங்கிரஸ் உறவு நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!