உலகம்
நகரம் முழுவதும் துர்நாற்றம் : மேயர் போட்ட அதிரடி உத்தரவு - நியூசிலாந்து நாட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் 2010ம் ஆண்டு 'இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்' திரைப்படம் வெளியானது. இப்படத்தில் ஒரு காட்சி வரும். அதில் வில்லன் கூட்டத்தினர் ராகவா லாரன்ஸ் இருக்கும் இடத்திற்கு வருவார்கள். அப்போது அவர்கள் இனி நீங்கள் எது செய்தாலும் எங்களிடம் கேட்டுதான் செய்ய வேண்டும் என கூறி ஒரு ஒப்பந்தம் போடுவார்கள்.
அப்போது ஒருவர், வில்லன் அருகே சென்று, 'குசு விடுவதற்குக் கூட அனுமதி கேட்க வேண்டாமா?' என கேட்பார். இந்த காட்சி அமெரிக்காவின் அணுக்குண்டு ஒப்பந்தத்தை விமர்சிக்கும் விதமாக எடுக்கப்பட்டு இருந்தாலும் இதற்கு ஈடான ஒரு சம்பவம் நியூசிலாந்தில் நடந்துள்ளது.
நியூசிலாந்து நாட்டில் லோயர் ஹட் என்ற ஒரு சிறிய நகரம் உள்ளது. இங்கு ஒரு தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சாப்பிடுவதைக் கூட தவிர்த்து வருகிறார்கள்.
அந்த நகரத்தின் எந்த பகுதிக்குச் சென்றாலும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மக்கள் மேயர் கேம்பல் பாரியிடம் முறையிட்டுள்ளனர். அப்போது அவர், மலம் கழிக்கக்கூடாது என கூறியுள்ளார். இது மக்களுக்குப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது பெரிய பிரச்சனையானதை அடுத்து, "நான் நகைச்சுவையாகத்தான் கூறினேன். மலக் கழிக்கக்கூடாது என்று உத்தரவுகள் எதுவும் நான் போடவில்லை" என மேயர் கேம்பல் பாரி தெரிவித்துள்ளார். 'இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்' படத்தின் காட்சிக்கு ஈடாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!