உலகம்
சீனாவில் திடீரென நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. தரைமட்டமான 5 ஆயிரம் கட்டடம் : 100 பேர் பலி !
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 127 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். சீனாவின் கன்சு மற்றும் கிங்காய் மாகாணங்களில் நேற்று இரவு நேரத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பயந்து போன மக்கள், அச்சத்தில் அலறியடித்து ஓடினர்.
சுமார் 6.2 என்ற ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தில் அங்கிருக்கும் பல ஆயிரம் கட்டடங்கள் சேதமாகியுள்ளது. அதில் சுமார் 5 ஆயிரம் கட்டடங்கள் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் பலரும் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். அதோடு இதுவரை சுமார் 127 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்த 2 மாகாணங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை சீனாவின் வடமேற்கு பகுதியான சின்ஜியாங் பகுதியில் 5.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆண்டு இறுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதால் சீனாவில் தற்போது பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Also Read
-
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!
-
வெள்ளை அறிக்கை : “‘Sorry Bro’ என்று சொல்வதற்கு 210 பக்கமா?” - முரசொலி கடும் தாக்கு!
-
“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!
-
“FIFA WorldCup.. ‘கால்பந்து குழந்தை இயேசு’ ரசிகர்களின் அளவிலா அன்பு” - சுவாரசிய சம்பவத்தின் பிண்ணனி!”