உலகம்
க்ரீமியா பகுதியில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் : வானிலேயே சுட்டு வீழ்த்திய ரஷ்ய ஏவுகணை அமைப்பு !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒன்றரை வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. எனினும் கடந்த 2 மாதமாக இரு பக்கத்தில் இருந்தும் பெரிய அளவில் தாக்குதல்கள் நடக்காத நிலையில், இந்த போர் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், ரஷ்யா கட்டுப்பாட்டில் இருக்கும் க்ரீமியா பகுதியில் உக்ரைன் ராணுவம் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது மீண்டும் அங்கு பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு உக்ரைன் சார்பில் க்ரீமியா பகுதியை நோக்கி ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. எனினும் இந்த தாக்குதலை ரஷ்யாவின் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் தடுத்து நிறுத்தின என்றும், இதில் 16 ட்ரோன்கள் வானிலேயே அழிக்கப்பட்டன என்றும் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கிழக்கு உக்ரைனில் உள்ள ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த அவ்டிவ்கா நகரை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கிழக்கு உக்ரைனின் ஏராளமான நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !