உலகம்
"ஒற்றை எதிரி கூட உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்காது" - மேற்கத்திய நாடுகளை வெளிப்படையாக மிரட்டிய புதின் !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒன்றரை வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது.
முதலில் நேரடி மோதலாக தொடங்கிய இந்த போர் தற்போது பெரும்பாலும் ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நவீன ஆயுதங்களின் சோதனைகளமாக மாறியுள்ளது. இதனால் இரு தரப்பிலும் புதிது புதிதான ஆயுதங்கள் இந்த போரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ரஷ்யாவின் தாக்குதலால் ஒற்றை எதிரி கூட உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்காது என ரஷ்யா அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய புதின் , புர்வெஸ்ட்நிக் என்ற அணுசக்தி திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது என்றும், இந்த வகை ஆயுதங்கள் வருங்காலத்தின் தலைசிறந்த அணு ஆயுதமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், ரஷ்யாவிற்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்த யாரும் திட்டமிடமாட்டார்கள் எனக் கூறிய அவர், அப்படி யாருக்கும் எண்ணம் இருந்தால் ரஷ்யாவின் பல ஏவுகணைகள் எதிரிகளின் வானில் பாய்ந்து ஒற்றை எதிரியை கூட விட்டுவைக்காது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்கா ஏற்காத அணு ஆயுத சோதனையை தடை செய்யும் ஒப்பந்தத்தை ரஷ்யா ஏற்று 1990ல் இருந்து அணு ஆயுத சோதனை எதையும் செய்யவில்லை என்று கூறிய அவர், தேவைப்பட்டால் நாடாளுமன்ற ஒப்புதலுடன் அணு ஆயுத தடைக்கு வழங்கிய ஒப்புதலில் இருந்து ரஷ்யா வெளியேறும் என்றும் மேற்கத்திய நாடுகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !