உலகம்
மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. இடிந்து விழுந்த கட்டடங்கள் : 300 பேர் பலி!
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று இரவு 6.8 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இரவு நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பலரும் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று இரவு 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக மொராக்கோவின் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் நிலநடுக்கம் அல்ஜீரியா வரை உணரப்பட்டுள்ளது.
Also Read
-
”இந்திய நாட்டிற்கு பெருமை தேடித்தந்த மாரியப்பன் தங்கவேல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
”கருவின் பாலினம் அறிவிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” : மக்கள் நல்வாழ்வுத் துறை அறிக்கை!
-
ஆளுநர் உத்தரவை ரத்து செய்த கேரள உயர் நீதிமன்றம் : சர்வாதிகாரத்திற்கு கிடைத்த பதிலடி!
-
சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு புகார் : உடனே நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசு - நடந்தது என்ன?
-
பாஜக கடவுளை அவமதிப்பது இது முதல் முறையல்ல.. பட்டியலிட்டு விமர்சித்த காங்கிரஸ் நிர்வாகி சுப்ரியா ஸ்ரீநேட்!