உலகம்
இரவில் NO internet.. 2 மணி நேரத்திற்கு மேல் செல்போன் பயன்படுத்த தடை: சீனாவில் சிறுவர்களுக்கு கட்டுப்பாடு!
இந்த நவீன உலகத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். கையடக்கத்தில் இருக்கும் இந்த செல்போன்கள் மூலம் நாம் உலகத்தையே அறிந்து கொள்கிறோம்.
அதேபோல் பல விதமான சமூகவலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதால் மனித உடல் பாகத்தின் ஒன்றாகவே செல்போன் மாறிவிட்டது. இதனால் 24 மணி நேரமும் பலர் செல்போனை பயன்படுத்துகிறார்கள்.
தொடர்ந்து செல்போனை பயன்படுத்தினால் முது, கழுத்து வலி மற்றும் ஞாபகமறதி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இன்றைய காலக் கட்டத்தில் செல்போனை நம்மால் தவிர்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது.
இந்நிலையில் இளம் தலைமுறைகளைப் பாதுகாக்கும் வகையில் சீனாவில் சிறுவர்கள் செல்போன்கள் பயன்படுத்துவதற்கு புதிய கட்டப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதில், 16 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கு மேல் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 1 மணி நேரமும் 8 வயதுக்கு உட்பட்டவர்கள் 40 நிமிடங்கள் மட்டுமே செல்போன்களை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு 18 வயதுக்கு உட்பட்டவர்கள் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரையில் இணையச் சேவையைப் பயன்படுத்தக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள் தொடர்பாக மக்கள் கருத்துத் தெரிவிக்கச் செப்டம்பர் 2-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, இந்த விதிமுறைகளை நடைமுறைக்குக் கொண்டு வருவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
திராவிட மாடலில் ‘மிளிரும் மகளிர்!’ : மகளிருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் உள்ளே!
-
2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!