உலகம்
வெளிநாடு செல்பவர்களே உஷார்.. பாஸ்போர்ட் அழுக்காக இருந்ததால் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்.. நடந்தது என்ன ?
நமது நாட்டில் விடுமுறையை கழிக்க ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வது வழக்கம். அதே கொஞ்சம் வசதியானவர்கள் என்றால் கோவா, மும்பை, சிம்லா போன்ற இடங்களுக்கு செல்வார்கள். அதே போல முன்னேறிய வெளிநாட்டினர் தங்கள் விடுமுறையை கழிக்க வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வர்.
அந்த வகையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மோனியூ சதர்லாந்து என்ற இளம்பெண் தனது தாயுடன் பாலி நாட்டுக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்துள்ளார். அதற்காக விமான டிக்கெட் என அனைத்து ஏற்பாடுகளையும் செய்த அந்த பெண் இறுதியில் விமானம் ஏற விமான நிலையத்துக்கு சென்றுள்ளார்.
அங்கு இருந்த கவுண்டரில் அவர்கள் தங்கள் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அளித்த நிலையில், அவர்களை விமான நிலைய ஊழியர்கள் தனியே அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதற்கான காரணத்தை கேட்டுள்ளனர்.
அப்போது, அவர்களின் பாஸ்போர்ட் மிகவும் அழுக்காக இருந்ததாகவும், இதனால் அபராதமாக 1000 அமெரிக்க டாலர்களைத் தர வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அபராதம் செலுத்த மறுத்தாலும், பின்னர் பாஸ்போர்ட் திரும்பக் கிடைக்காது என விமான நிலைய அதிகாரிகள் அச்சுறுத்தியதால் வேறு வழியின்றி அபராதத்தை செலுத்தியுள்ளார்.
அதன்பின்னரே அவ்ர்களுக்கு பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கூறியுள்ள அந்த பெண், பாஸ்போட் 7 வருடம் பழமையானது என்பதால் சிறிது அழுக்காக இருந்தது. இதனால் எனக்கு அபராதம் விதித்துவிட்டனர். என்னை அவர்கள் ஏமாற்றி பணம் பறித்துவிட்டனர் எனக் கூறியுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“100 கி.மீ தூரத்திற்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம்!” : கிருஷ்ணகிரியில் துணை முதலமைச்சர் உரை!
-
“தி.மு.க. செய்த சாதனை என்ன என்பதை மக்கள் சொல்வார்கள்!” : பிரதமர் மோடிக்கு முரசொலி தலையங்கம் பதிலடி!
-
பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை மற்றும் ஓய்வூதிய உயர்வு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!