உலகம்
அடுத்த மாதம்.. ஏலத்திற்கு வரும் பறக்கும் Dinosaur எலும்புக் கூடுகள்: ஆர்வம் காட்டும் நிறுவனங்கள்!
230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகத்தில் டைனோசர் என்ற கொடூர விலங்கு இருந்துள்ளது. காலத்தின் அழிவால் இந்த 21ம் நூற்றாண்டு இந்த விலங்கினம் இல்லை. இப்போது இருக்கும் யாரும் இந்த விலங்கைப் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை.
ஆனால் டைனோசர் எப்படி இருக்கும் என்பதை "ஜுராசிக் பார்க்" திரைப்படம்தான் நமக்குக் காட்டியது. மேலும் எத்தனை வகையான டைனோசர் இனங்கள் இருந்தன அதன் குணங்கள் என்ன என்பதை எல்லாம் இந்த படம் தான் நமக்கு எடுத்துக் கூறியது.
இந்த உலகின் பல்வேறு இடங்களில் டைனோசர் தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பல இடங்களில் டைனோசர் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை மக்கள் பார்வைக்காக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பறக்கும் டைனோசரின் எலும்புக்கூடு சுவிட்சர்லாந்து நாட்டில் அடுத்த மாதம் ஏலத்திற்கு விடப்படுகிறது எனக் கொல்லர் என்ற ஏல நிறுவனம் அறிவித்துள்ளது. ஐரோப்பாவில் டைனோசர் எலும்புக்கூடு ஏலம் விடுவது இதுவே முதல்முறையாகும்.
இதனால் பறக்கும் இடைனோசர் எலும்புக்கூட்டை வாங்க பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகிறன. இந்த பறக்கும் டைனோசரின் எலும்புக்கூடு சுமார் ரூ.70 கோடி வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?
-
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்.. சென்னையில் முகாம்கள் நடைபெறும் நாள், இடங்கள் என்ன?- முழு விவரம் உள்ளே!
-
கடலூர், சிதம்பரம் மக்கள் கவனத்துக்கு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன ?
-
துணை வேந்தர் விவகாரம்... ஆளுநரின் நியமனம் செல்லாது : மீண்டும் மீண்டும் கொட்டுவைத்த உயர்நீதிமன்றம் !