உலகம்
”சாத்தான் சொன்னதால் மனைவியின் மூளையை சாப்பிட்டேன்”.. போலிஸார் விசாரணையில் ஷாக் கொடுத்த கணவர் !
வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர் அல்வாரோ. 32 வயதான இவருக்கு மரியா என்ற மனைவி உள்ளார். இந்த சூழலில் இவருக்கு சாத்தானை வழிபாடு செய்யும் நம்பிக்கை இருந்துள்ளது. எனவே அதில் மூழ்கி இருந்துள்ளார். மேலும் இவர் போதைக்கும் அடிமையாக இருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஜூன் 29-ம் தேதி தனது மனைவியை கொடூரமாக தாக்கியுள்ளார். மேலும் அவரை கொன்று துண்டு துண்டாக வெட்டி அவரது உடலை தனித்தனி பாகமாக ஆக்கியுள்ளார். அது மட்டுமின்றி, தனது மனைவியின் மூளையை வெளியே எடுத்து அதனை தான் சாப்பிடும் சாப்பாடோடு கலந்து சாப்பிட்டுள்ளார்.
போதையில் இவ்வளவு கொடூரத்தை செய்த அந்த நபர் தனது மனைவியின் உடல் பாகத்தை சில பாகங்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டுவிட்டு, மேலும் சில பாகங்களை மலையில் வீசியுள்ளார். மீதமுள்ளவற்றை தனது வீட்டிலேயே வைத்துள்ளார். மேலும் அவரது மனைவியின் மண்டை ஓட்டை சிகெரட் சாம்பல் போடும் ஆஷ் டிரேவாக பயன்படுத்தி வந்துள்ளார்.
சுமார் 2 நாட்களுக்கு பிறகு அந்த நபருக்கு போதை தெளிந்துவிட்டது. இதையடுத்து தனது வளர்ப்பு மகளை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறியுள்ளார்.
பின்னர் அவர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் கூறிய பிறகே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் குற்றவாளி அல்வாரோவை அதிரடியாக கைது செய்து விசாரித்தனர். அப்போது சாத்தானை வழிபடும் தன்னை, சாத்தான் தான் இவ்வாறு செய்ய சொன்னதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார்.
மனைவியை கொடூரமாக கொன்று அவரது மூளையை சாப்பிட்ட கணவரின் செயல் அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே திருமணமான மரியாவுக்கு 5 குழந்தைகள் இருக்கும் நிலையில், அல்வாரோவுடன் சந்திப்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் காதலித்த பிறகு, தனது முன்னாள் கணவரை விவாகரத்து செய்த மரியா, கடந்த ஆண்டு தன அல்வாரோவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து 1 ஆண்டிலே இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“எத்தனை விருது கிடைத்தாலும், தமிழக அரசின் விருதுகளான ‘தாயின் முத்தத்திற்கு’ ஈடாகாது!” : உதயநிதி பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்! : முழு விவரம் உள்ளே!
-
“எடப்பாடி பழனிசாமியின் வாயை, நம் முதலமைச்சர் இன்றைக்குத் தைத்துவிட்டார்!” : அமைச்சர் ரகுபதி!
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!