உலகம்

வளர்ப்பு நாயை பாலியல் வன்கொடுமை செய்த இளம்பெண்.. வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டதால் அதிர்ச்சி !

பாலியல் வன்கொடுமை என்பது அன்றாடம் நாம் தினமும் படிக்கும் ஒரு செய்தியாக அமைந்துள்ளது. பெண்களை குறிவைத்து சில ஆண்கள் இப்படி செய்வது உண்டு. ஆனால் சில இளைஞர்கள் தங்கள் ஆசையை கட்டுப்படுத்த இயலாமல் போதையில் வயதான பெண்களிடமும், மூதாட்டியிடமும் இவ்வாறு தகாத முறையில் நடந்துகொள்ளும் செய்திகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இதுபோன்ற சம்பவங்களை ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் செய்து வரும் செய்திகள் அவ்வப்போது வெளி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பகுதி ஒன்றில், ஒரு ஆண் நபரை சில பெண்கள் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார். தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகள் அதிர்ச்சியை கொடுத்தாலும், மனிதர்களை தாண்டி சில பேர் மிருகங்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வார்.

இதுபோல் பல விஷயங்கள் நடந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெலிவரி பாய் ஒருவர் சாலையோரம் இருந்த நாய் குட்டியை பிடித்து பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அண்மையில் கூட திருமணமான நபர் ஒருவர் தனது குடியிருப்பு பகுதி அருகே நாயை வன்கொடுமை செய்தார். இதுகுறித்து பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த புகாரின்பேரில் அவரை கைது செய்தனர்.

இப்படி தொடர்ந்து பல சம்பவங்கள் நிகழ இளம்பெண் ஒருவர் தன்னுடைய வளர்ப்பு நாயை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு அதனை வீடியோவாக எடுத்து தனது சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட நபர் ஒருவர் அவர் மீது புகார் அளிக்கவே அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் மிசிஸிப்பி மாகாணத்தில் வசித்து வருபவர் டெனிசி பிரேசியர். 19 வயது இளம்பெண்ணான இவர் டிக்டாக், ஸ்னாப்சேட் உள்ளிட்ட சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்துள்ளார். அங்கே பலரும் வீடுகளில் செல்ல பிராணியாக நாயை வளர்த்து வரும் சூழலில் இவரும் ஜெர்மன் ஷெப்பர்டு என்ற வகை நாயை வளர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இவர் தனது நாயுடன் பாலியல் உறவு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதனை அவர் வீடியோவாக எடுத்துள்ளார். அதோடு மட்டுமின்றி, அதனை தனது சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் நபர் ஒருவர் புகார் அளிக்கவே, அந்த இளம்பெண்ணை காவல் துறையினர் தேடி சென்று கைது செய்துள்ளனர். தற்போது அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம்பெண்

முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டும் இதே போல் ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் தனது வளர்ப்பு நாயை பாலியல் வன்கொடுமை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வளர்ப்பு நாயை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட அமெரிக்காவை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பெங்களூரு டு ஒடிசா.. 1300 கி.மீ நடந்தே சென்ற 3 தொழிலாளர்.. சம்பளம் கொடுக்காத முதலாளிக்கு வலை !