உலகம்
உயிரோடு கல்லறைக்குள் புதைக்கப்பட்ட பெண்.. கடைசி நேரத்தில் வந்த போலிஸார். பிரேசிலை உலுக்கிய சம்பவம் !
பிரேசில் நாட்டில் மினாஸ் கெராயிஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு கல்லறை தோட்டம் அருகே கல்லறைக்குள் இருந்து பெண்ணின் அழுகுரல் மற்றும் முனங்கல் சத்தம் அங்கிருப்பவர்களுக்கு கேட்டுள்ளது. முதலில் கற்பனை என கருதிய நிலையில், தொடர்ந்து அந்த சத்தம் கேட்டுவந்ததால் இது குறித்து காவல்நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் கல்லறைக்குள் இருந்து பெண்ணின் குரல் கேட்பதை உறுதி செய்து கல்லறையை உடைத்து அது மோசமான உடல் நிலை பாதிப்புடன் இருந்த பெண்ணை அங்கிருந்து மீட்டனர். மூச்சி விட கடினமாக நிலையில் அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார் அந்த பெண்ணிடம் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, முகமூடியணிந்த இருவர் தம்மை கல்லறை பகுதிக்கு அழைத்து வந்ததாகவும், பின்னர் கடுமையாக தாக்கி, கல்லறைக்குள் வைத்து மூடியதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், போலிஸார் விசாரணையில் இந்த பெண் போதைமருந்து கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பவர் என்றும், அந்த கும்பல் கொடுக்கும் போதை மருந்தை இவர் பாதுகாத்து வந்ததாகவும், பின்னர் இவர் அந்த கும்பலை ஏமாற்ற முயன்றதன் காரணமாக அந்த கும்பல் இவரை தாக்கி உயிரோடு கல்லறைக்குள் தள்ளியதாகவும் கூறியுள்ளனர்.
சுமார் 36 வயதுடைய அந்த பெண்ணுக்கு தலையில் கடுமையாக காயம் இருப்பதால் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் என்றும், அவருக்கு குணமானதும் இது தொடர்பாக அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இது ஜால்ரா பட்ஜெட்.. எங்கள் கேள்விகளுக்கு முடிந்தால் முதலமைச்சர் பதில் சொல்லட்டும்” : உதயநிதி ஸ்டாலின்!
-
வெற்று பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது வேளாண் நிதிநிலை அறிக்கை : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
வேளாண் பட்ஜெட்டிலும் ஸ்டிக்கர் ஒட்டிய த.வெ.க அரசு : பல திட்டங்களுக்கு நிதியும் குறைப்பு!
-
உதயநிதி ஏற்படுத்திய எழுச்சி : தனக்குத் தானே ‘சூனியம்' வைத்துக் கொண்ட முதலமைச்சர் விஜய்!
-
“தவெக ஆதரவு.. அமைச்சர் பதவி ஆசை.. ராஜினாமா செய்ய வைகோ நிர்பந்தித்தார்” : மதிமுக எம்.எல்.ஏ-க்கள் பேட்டி!