உலகம்
நீண்டு கொண்டே செல்லும் உக்ரைன் போர்.. ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்குகிறதா சீனா? வெளியான திடீர் அறிக்கை !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒரு வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. , உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் வலுவான அதிநவீன லெப்பா்ட்-2 பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்கிய நிலையில், இது மோதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துசென்றுள்ளது.
மேலும், சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீரென உக்ரைனுக்கு சுற்றுப்பயணம் செய்தது ரஷ்யாவின் கோவத்தை பலமடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா அறிவித்த நிலையில், தற்போது தனது தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யாவுக்கு சுற்று பயணம் செய்து அங்கு ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து மேற்கு நாடுகளை கண்டித்து இருவரும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், ரஷ்யாவை தனிமைப்படுத்த மேற்கு உலகம் துடிப்பதை கண்டித்தும், ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் இருந்து புதினை கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கும் உக்ரைனில் அமைதி திரும்ப, சீன அதிபர் முன்னெடுத்த அமைதி பேச்சுவார்த்தையை மேற்கு நாடுகள் புறக்கணித்ததற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு 16 பில்லியன் டாலர்கள் நிதி உதவி மற்றும் பீரங்கிகளை வழங்கிய மேற்கு நாடுகளை இரு நாடுகளின் விமர்சித்துள்ள நிலையில், சீனா இந்த விவகாரத்தில் எந்த சார்பும் இல்லாமல் இருக்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!