உலகம்
பறந்துகொண்டிருந்தபோதே பிரிந்த உயிர்..விமான பயிற்சியாளருக்கு நேர்ந்த சோகம்..விளையாடுவதாக நினைத்த சக விமானி
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்தின் லண்டன் விமான நிலையத்தில் விமான பணிப்பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் அதே பாணியில் விமானி ஒருவர் அதே இங்கிலாந்தில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் பிரபல நாளிதழில் வெளியான செய்தியின்படி பிளாக்பூர் விமான நிலையத்தில் இருந்து விமானி ஒருவரும், விமான பயிற்சியாளர் ஒருவரும் வழக்கம் போல விமானத்தின் ஏறி பயணித்துள்ளனர். இருவரும் நன்கு பழகியவர்கள் என்பதால் வழக்கம் போல சிரித்து பேசி கிண்டல் செய்து வந்துள்ளனர்.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமான பயிற்சியாளர் விமானியின் தோல் மீது தலை சாய்ந்துள்ளார். அப்போது அவர் தூங்குவது போல நடிப்பதால் தான் இவ்வாறு செய்கிறார் என எண்ணிய விமானி தொடர்ந்து விமானத்தில் பறந்து விமானநிலையத்தில் தரை இறங்கியுள்ளார்.
பின்னர் பயிற்சியாளரை எழுப்ப முயன்றபோது அவர் தலை சரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி இது குறித்து அவசர உதவி எண்ணை அழைத்து கூறியுள்ளார். பின்னர் அவர்கள் வந்து விமான பயிற்சியாளரை பரிசோதனை செய்தபோது அவர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
அவர் இறப்புக்கு மாரடைப்பு தான் காரணம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், உயிரிழந்த விமான பயிற்சியாளர் எந்த பிரச்னையும் இல்லை என்று நகைச்சுவையாக கூறியதாக விமானி கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.3 ஆயிரத்துடன் கூடிய தமிழர் திருநாள் ‘பொங்கல்’ பரிசுத் தொகுப்பு! : திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!
-
“‘தான் திருடி, பிறரை நம்பார்’ என்பதைப் போன்றவர்தான் எடப்பாடி பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!