உலகம்
கைக்குழந்தைக்கு தனி டிக்கெட் எடுக்க வேண்டும்.. கறாராக கூறிய விமான நிறுவனம்.. அதிரடி முடிவெடுத்த தம்பதி !
பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி தங்களின் கைக்குழந்தையோடு இஸ்ரேல் நாட்டுக்கு சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். அங்கு சுற்றிப்பார்த்தவர்கள் மீண்டும் தங்கள் நாட்டுக்கு செல்ல தங்கள் இருவருக்கு மட்டுமே அயர்லாந்து நாட்டை சேர்ந்த ரையன் நிறுவன விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
பின்னர் விமானம் கிளம்பும் நேரத்துக்கு சற்றுமுன்னர் விமான நிலையம் சென்றவர்கள் தங்கள் டிக்கெட்டுகளை விமான நிலைய ஊழியர்களிடம் காட்டியுள்ளனர். அதனைப் பார்த்த அவர்கள் கைக்குழந்தைக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், இதனை மறுத்த அந்த தம்பதி விமான நிலைய ஊழியர்களுடன் விவாதம் செய்துள்ளனர்.
ஆனால், டிக்கெட் இல்லாமல் கைக்குழந்தையை உள்ளே அனுமதிக்க முடியாது என அந்த ஊழியர்கள் உறுதிபட கூறியுள்ளனர். அதன்பின்னர் அந்த தம்பதி குழந்தைக்கு டிக்கெட் எடுப்பார்கள் என காத்திருந்த அந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அந்த தம்பதியினர் குழந்தைக்கு டிக்கெட் எடுக்காமல் தங்கள் கைக்குழந்தையை அங்கே இருந்த கவுண்டரில் விட்டுவிட்டு விமானத்தை நோக்கி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விமான நிலைய ஊழியர்கள் குழந்தைக்கு டிக்கெட் எடுத்து உள்ளே செல்லுமாறும், இல்லையெனில் குழந்தையை எடுத்துக்கொண்டு விமான நிலையத்தில் இருந்தே வெளியேறுமாறும் கூறியுள்ளனர்.
ஆனால், இதற்கு அந்த தம்பதியினர் மறுத்த நிலையில், கைக்குழந்தையை தனியே விட்டு சென்ற அந்த தம்பதியை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுவாக பல நாடுகளில் குழந்தைகளுக்கு மொத்த டிக்கெட் கட்டணத்தில் 10% வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அதிமுகவிற்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாததால் S.I.R - ஐ ஆதரிக்கிறார்கள்!” : என்.ஆர்.இளங்கோ கண்டனம்!
-
பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
திருக்கோயில் பயிற்சி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
-
வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு; ராசிபுரத்தில் டைடல் பூங்காவுக்கு அடிக்கல்: சாதனை படைத்த தமிழ்நாடு!
-
சென்னையில் ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை... வெற்றி கோப்பையை அறிமுகப்படுத்திய முதலமைச்சர் !