உலகம்
Mark குறைத்ததால் ஆத்திரம்.. வீட்டிற்கு சென்ற ஆசிரியரை கொலை செய்த சிறுவர்கள்: அமெரிக்காவில் அதிர்ச்சி!
அமெரிக்காவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் நோஹோமா கிராபர். இவர் பள்ளி முடித்து விட்டு வீட்டிற்குச் செல்லும் போது இரண்டு சிறுவர்கள் அவரை குத்தி கொலை செய்து உடலை அருகே இருந்த பூங்காவில் மறைத்துள்ளனர்.
பின்னர் அவரது உடலை மீட்ட போலிஸார் இது குறித்து விசாரணை செய்தனர். அதில் கொலை செய்யப்பட்ட ஆசிரியரின் வகுப்பில் படித்து வந்த வில்லார்ட் மில்லர், ஜெர்மி குடேல் ஆகிய இரண்டு மாணவர்கள்தான் கொலை செய்துள்ளனர் என்பதை போலிஸார் கண்டுபிடித்து கைது செய்தனர்.
பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், தேர்வில் மதிப்பெண் குறைவாக கொடுத்ததால் ஆசிரியரை இருவரும் சேர்ந்து கொலை செய்தது கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை கடந்த 2021ம் ஆண்டு நடந்துள்ளது.
இந்த கொலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. மதிப்பெண் குறைந்து வழங்கியதால்தான் கொலை நடந்துள்ளது என போலிஸார் கூறிவந்தாலும், சிறுவர்களது வழக்கறிஞர்கள் அதை மறுத்து வருகின்றனர். இதனால் இன்னும் சிறுவர்கள் இருவருக்கும் ண்டனை வழங்காமல் உள்ளது நீதிமன்றம். மேலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதேபோல் நீதிமன்ற விசாரணையில் ஆசிரியர் கொலை செய்யப்பட்டது உறுதியானால் சிறுவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்படும் என கூறப்படுகிறது. 16 வயது மாணவர்கள் தங்களது வகுப்பு ஆசிரியரைக் கொலை செய்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.1000 வரவு வைத்தது தவெக அரசு : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொண்டு வந்தே திட்டங்களே நிலைத்து நிற்கும்!
-
“இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல”: மீண்டும் பிற்போக்குவாதிகளை கதறவிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
-
அ.தி.மு.க ஆதரவு : “ஊழல் சக்திகள் தயவில் விஜய் ஆட்சி!...” -வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!
-
“இனி நாம் என்ன பண்ணணும்?” : ‘உடன்பிறப்பின் குரல்’ இணையதளம் தொடங்கி கருத்து கேட்கும் கழக தலைவர்!
-
“குதிரை பேரம் குறித்து முதல்வர் விஜய் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?” : திமுக எம்.பி வில்சன் காட்டம் !