உலகம்
சொத்தையான பற்கள்.. அதிக அளவில் குளிர்பானங்களை குடித்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..மருத்துவர்கள் எச்சரிக்கை!
குளிர்பானம் போன்ற பானங்களை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் பல்சொத்தை, உடல்நலக்கோளாறு ஆகியவை ஏற்படும் என மருத்துவநிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். ஆனால் அதனை பலர் பின்பற்றுவதில்லை.
இந்த நிலையில் தொடர்ந்து அதிக அளவில் சோடா குளிர்பானங்களை அதிக அளவில் குடித்ததால் பெண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தென்பகுதியில் அமைண்ட்துள்ள மாலத்தீவை சேர்ந்தவர் ரூஹா (வயது 18). இவர் சோடா அடங்கிய குளிர்பானங்களை அதிக அளவில் குடித்து வந்துள்ளார். இது தொடர்பாக பலர் எச்சரிக்கை விடுத்த நிலையில் அதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.
இது அவருக்கு இறுதியில் பெரும் பாதிப்பை கொடுத்துள்ளது. சோடாவின் காரணமாக அவரின் பற்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு சொத்தையாகியுள்ளது. அதிலும் குறிப்பாக மேல் பக்கம் இருக்கும் பற்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மாலத்தீவில் இருக்கும் மருத்துவமனையை அவர் அனுகியுள்ளார். அங்கு இந்தியாவில் இருக்கும் மருத்துவமனையை அணுகுமாறு கூறியுள்ளனர். அதன்படி அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.
அங்கு அவருக்கு நல்ல முறையில் பல் கட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது நல்ல நிலையில் தோற்றம் அளிக்கிறார். எனவே அதிக அளவில் குளிர்பானம் அருந்தக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தது வருகின்றனர்.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!