உலகம்
சொத்தையான பற்கள்.. அதிக அளவில் குளிர்பானங்களை குடித்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..மருத்துவர்கள் எச்சரிக்கை!
குளிர்பானம் போன்ற பானங்களை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் பல்சொத்தை, உடல்நலக்கோளாறு ஆகியவை ஏற்படும் என மருத்துவநிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். ஆனால் அதனை பலர் பின்பற்றுவதில்லை.
இந்த நிலையில் தொடர்ந்து அதிக அளவில் சோடா குளிர்பானங்களை அதிக அளவில் குடித்ததால் பெண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தென்பகுதியில் அமைண்ட்துள்ள மாலத்தீவை சேர்ந்தவர் ரூஹா (வயது 18). இவர் சோடா அடங்கிய குளிர்பானங்களை அதிக அளவில் குடித்து வந்துள்ளார். இது தொடர்பாக பலர் எச்சரிக்கை விடுத்த நிலையில் அதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.
இது அவருக்கு இறுதியில் பெரும் பாதிப்பை கொடுத்துள்ளது. சோடாவின் காரணமாக அவரின் பற்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு சொத்தையாகியுள்ளது. அதிலும் குறிப்பாக மேல் பக்கம் இருக்கும் பற்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மாலத்தீவில் இருக்கும் மருத்துவமனையை அவர் அனுகியுள்ளார். அங்கு இந்தியாவில் இருக்கும் மருத்துவமனையை அணுகுமாறு கூறியுள்ளனர். அதன்படி அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.
அங்கு அவருக்கு நல்ல முறையில் பல் கட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது நல்ல நிலையில் தோற்றம் அளிக்கிறார். எனவே அதிக அளவில் குளிர்பானம் அருந்தக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தது வருகின்றனர்.
Also Read
-
திருவள்ளூர் அம்மோனியா வாயுக் கசிவு : 2 பேர் பலி... 50-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை - விவரம்!
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!