உலகம்
சொந்த நாட்டின் மீதே குண்டு வீசிய தென்கொரியா.. பதிலடி கொடுக்க நினைத்து மன்னிப்பு கேட்ட ராணுவம் !
கொரிய தீபகற்பத்தில் இருக்கும் வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக பகை இருந்து வருகிறது. இதில் அமெரிக்காவின் முழு ஆதரவு தென்கொரியாவிற்கு இருப்பதால் வடகொரியாவுக்கு உலக நாடுகள் பயங்கர பொருளாதார தடையை விதித்துவருகின்றது.
எனினும், வடகொரியா அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் தொடர்ந்து எதிர்த்து நின்று வருகிறது. அமெரிக்க அச்சம் காரணமாக கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளையும் வடகொரியா உருவாகியுள்ளது.
அதனை பலமுறை வடகொரியா சோதனை நடத்தியுள்ளது. சமீபத்தில் இரண்டு வாரங்களில் 6-வது முறையாக வியாழக்கிழமை ஏவுகணை சோதனை மேற்கொண்டது வட கொரியா. இந்த ஏவுகணைகள் ஜப்பான் வான்வெளி வழியாக சென்று பசிபிக் கடலில் விழுந்தது.
வடகொரியாவின் இந்த முயற்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கிழக்கு கடற்பகுதியில் தென் கொரியாவும் அமெரிக்காவும் பல ஏவுகணைகளை செலுத்தின. அதைத் தொடர்ந்து தென்கொரிய ராணுவம் தனியே ஏவுகணை ஒன்றை செலுத்தியது.ஆனால் இந்த ஏவுகணை சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து நொறுங்கிவிட்டதாக தகவல் வெளியானது. இந்த தகவலை அந்நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தென்கொரியா ராணுவம், ஹுயுன்மூ-2 என்ற இந்த ஏவுகணை வெடிக்கவில்லை என்றும், இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளது. மேலும், இது குறித்து கவலைகள் எழுந்ததற்கு மன்னிப்பும் கோரியுள்ளது.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!