உலகம்
குளோனிங் மூலம் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஓநாய்..100 நாட்கள் வாழ்ந்து சாதனை.. பிரமிக்கவைக்கும் உருவாக்கம்!
உலகில் நாளுக்கு நாள் அறிவியல் வளர்ந்து வருகிறது. அதன் உச்சகட்டமாக கலவி இல்லாமலேயே இனப்பெருக்கம் செய்யும் குளோனிங் முறை தற்போது வெற்றி பெற்றுள்ளது. பல ஹாலிவுட் படங்கள் இதன் அடிப்படையில் வெளிவந்து குளோனிங் என்றால் என்ன என்பதை மக்களுக்கு உணர்த்தியுள்ளன.
இந்த நிலையில், ஆர்க்டிக் ஓநாய் ஒன்றை குளோனிங் செய்து சீனாவை சேர்ந்த சினோஜீன் பயோடெக்னாலஜி நிறுவனம் சாதனை படைத்துள்ளது. குளோனிங் மூலம் கடந்த ஜூன் 10ஆம் தேதி உருவாக்கப்பட்ட இந்த ஓநாய் 100 நாட்களை கடந்து வாழ்ந்து வருகிறது. மேலும் அந்த ஓநாய் நலமாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இதன் உருவாக்கம் பற்றியும் தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அதில்படி, ஒரு பெண் நாயின் அணுக்கருக்கள் மற்றும் ஒரு பெண் ஆர்க்டிக் ஓநாயின் சோமாடிக் செல்கள் ஆகியவற்றிலிருந்து 130க்கும் மேற்பட்ட புதிய கருக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
அதிலிருந்து செயற்கையாக கரு வளர்ச்சியைத் தொடங்குமாறு தூண்டிவிடப்பட்டு பின்னர் வளரும் கருவானது, பின்னர் ஒரு வாடகைத் தாயின் வயிற்றில் பொருத்தப்பட்டு முழுக்குட்டி உருவாகும் வரை பராமரிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்துறையில் இது மாபெரும் வெற்றியாக கருதப்படுகிறது. இதன் மூலம் இந்த துறையில் மற்றொரு மைல்கல் எட்டப்பட்டுள்ளதாகவும், பல்வேறு விலங்குகளில் இந்த சோதனை நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!
-
5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள்…அனைத்து தரப்பினருக்குமானது திராவிட மாடல் ஆட்சி: துணை முதலமைச்சர் பேச்சு!
-
சாலைப் பயணத்திற்கு இனி கவலை இல்லை… ரூ.1,843.85 கோடி செலவில் 11 சாலைகள்: திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
ரூ.211.90 கோடியில் 45 முடிவுற்ற, ரூ.53.76 கோடியில் 9 புதிய திட்டப் பணிகள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!