உலகம்

எலிசபெத் ராணியின் உயிலுக்கு சீல்.. 90 ஆண்டுகளுக்கு பிறகே திறக்க உத்தரவு.. காரணம் என்ன ?

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் சில நாட்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அவர் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.

அவரின் இறுதி சடங்கு வரும் 19ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் உலகத்தலைவர்கள் பலர் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் மறைவை அடுத்து உலக தலைவர்கள் ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவித்தனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.ராணி எலிசபெத் இறந்ததையடுத்து பிரிட்டன் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கிறது. மேலும் அந்நாட்டு மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன்பு குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரிட்டன் அரசு குடும்ப நடைமுறைப்படி, இரண்டாம் எலிசபெத் ராணியின் உயில் லண்டனில் குறைந்தது 90 ஆண்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரச குடும்பத்தில் இ இறந்த அரச குடும்பத்தாரின் உயில்களுக்கு சீல்வைக்கும் நடைமுறை 1910-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது.

லண்டன் உயர் நீதிமன்ற குடும்ப வழக்குப்பிரிவின் தலைமை நீதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த உயில்கள் பாதுகாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 90 ஆண்டுகளுக்கு பின்னர் அரச குடும்பத்தினரிடம் அந்த உயில் வழங்கப்படும் என்றும் அத்னபின்னரே அதில் என்ன இருக்கிறது என்பது வெளியுலகுக்கு தெரியவரும்.

Also Read: "தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவின் வளர்ச்சிக்கே வித்திட்டவர் அறிஞர் அண்ணாதான்" - அண்ணாதுரை செய்தது என்ன ?