உலகம்
அழிவின் பிடியில் புராதான சின்னம்.. சிந்து சமவெளியின் மொஹஞ்சதாரோவில் இடிந்து விழுந்த பண்டைய சுவர்கள் !
கடந்த 1922-ம் ஆண்டு ஒன்றுபட்ட இந்தியாவில் அமைந்திருந்த புராதான மொஹஞ்சதாரோ நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. சிந்து சமவெளி நாகரீகத்தின் ஒரு பகுதியான மொஹஞ்சதாரோ பல நம்பிக்கைகளுக்கு முடிவு கட்டியது.
சுமேரிய, எகிப்திய நாகரிகங்களே பழமையானது என்று அனைவரும் நம்பிக்கொண்டிருந்த நிலையில், கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரீகங்கள் சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுக்கு இணையாக பழமையானதாக அடையாளம் காணப்பட்டது.
அதோடு, ஆரியர்,திராவிடர் கோட்பாட்டுக்கு வலுமையான ஆதாரமாகவும் இது மாறியது. இதன் பழமை காரணமாக யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. தற்போது பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சிந்து நதிக்கு அருகில் அமைந்துள்ள மொஹஞ்சதாரோ நகரம் தற்போது அழிவில் பிடியில் சிக்கியுள்ளது.
பாகிஸ்தானில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக சிந்து நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த் வெள்ளத்தில் பலர் உயிரிழந்த நிலையில், வெள்ளத்தால் மொஹஞ்சதாரோ நகரம் அழிவின் பிடியிலுள்ளது.
இதுகுறித்து கூறிய அதிகாரிகள், "வெள்ளம் மொகஞ்சதாரோவை நேரடியாக பாதிக்கவில்லை என்றாலும் வரலாறு காணாத மழையானது பண்டைய நகருக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பல்வேறு பெரிய சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்காணிப்பில் இந்தப் பணி நடைபெறுகிறது” எனக் கூறியுள்ளனர்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!