உலகம்
டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட முன்னாள் மனைவி.. 1400 கி.மீ தாண்டி துப்பாக்கியால் சுட்டு கொன்ற கணவன்..
அமெரிக்கா-பாகிஸ்தானிய புகைப்படக்கலைஞர் தான் சானியா கான் (வயது 29). இவரும் பாகிஸ்தானை சேர்ந்த ரஹீல் அகமது (வயது 36) என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு திருமணம் ஆகி, சில காலங்களிலே மன வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
இதில் ரஹீல் அகமது தற்போது ஜார்ஜியாவிலும், சானியா கான் சிகாகோ நகரத்திலும் வசித்து வருகின்றனர். இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியே தங்களது வாழ்வை வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சானியா, கடந்த சில தினங்களுக்கு முன்பு டிக்டாக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனது திருமண வாழ்க்கையின் கசப்பான நினைவுகளை பகிர்ந்திருந்தார். மேலும் விவாகரத்துக்கு பின்னர் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோவை பார்த்த சானியாவின் முன்னாள் கணவர் ரஹீல், ஜார்ஜியாவில் இருந்து சுமார் 1400 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து, கார் மூலம் பயணம் செய்து சிகாகோவிற்கு வந்தார். பின்னர் அவரது முன்னாள் மனைவியான சானியாவை தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கி மூலம் சுட்டுள்ளார். பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
துப்பாக்கியால் சுடும் சத்தத்தை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், ரஹீலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் போகும் வழியிலேயே ரஹீல் உயிரிழந்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரிக்கையில், அவர்களது மண வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை சானியா கான் பொதுவெளியில் பகிர்ந்ததால், ஆத்திரமடைந்த ரஹீல், சானியாவை கொலை செய்ததோடு தானும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!