உலகம்
நீச்சல் குளத்தில் விழுந்த பெரிய ஓட்டை.. ஒருவர் உயிரிழப்பு.. பார்ட்டியில் நிகழ்ந்த பரிதாபம் !
இஸ்ரேல் நாட்டிலுள்ள கர்மி யோசெப் என்ற நகரில் உள்ள தனியார் ஹோட்டலில், பார்ட்டி ஒன்று நடந்துள்ளது. சிலர் தங்களது பார்ட்டியை கொண்டாட அங்கிருந்த நீச்சல் குளத்தில் குளித்து குதூகலமாக இருந்து வந்தனர். அப்போது நீச்சல் குளத்தில் எதிர்பாராத விதமாக பெரிய பள்ளம் ஏற்பட, இருக்கும் தண்ணீர் எல்லாம் பள்ளத்தின் வழியே சென்று விட்டது. இதனால் ஒருவர் பள்ளத்தின் குழியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவத்தன்று இந்த நீச்சல் குளத்தில் 6 குளித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென்று ஏற்பட்ட பள்ளம் காரணமாக இரண்டு பேர் ஒதுங்கி நின்றுள்ளனர். மேலும் மற்ற இரண்டு பேரையும் அந்த குழி தண்ணீருடன் சேர்த்து இழுத்தது. இதில் 34 வயதுடைய நபர் ஒருவர் இலேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
மேலும் 32 வயதுடைய மற்றொரு நபர் அந்த குழியில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த நீச்சல் குளத்தில் ஏற்பட்ட பள்ளத்தை சிங்க்ஹோல் (Sinkhole) என்று சொல்வர். இதுபோன்ற சிங்க்ஹோல் நிலத்திற்கு அடியே இருக்கும் மண் நீரில் கரைந்து போகும்போது மெல்லிய அடுக்கு மட்டுமே இருக்கும். அந்தச் சமயத்தில் எதிர்பாராத விதமாக இதுபோன்ற சிங்க்ஹோல்கள் ஏற்படலாம்.
சுண்ணாம்பு, கார்பனேட் பாறை அல்லது உப்புப் பாறைகள் இருக்கும் இடங்களில் சிங்க்ஹோல்கள் அதிகம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !