உலகம்
கடலில் நீந்திக் கொண்டிருந்த பெண்.. நொடிப்பொழுதில் கடித்து குதறிய சுறா: கடற்கரையில் நடந்த கொடூரம்!
எகிப் நாட்டில் சால் ஹசீஷ் பகுதியில் செங்கடல் என்ற பிரபலமான கடற்கரை சுற்றுலாத்தலம் உள்ளது. இங்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து கடலில் மகிழ்ச்சியாகக் குளித்துச் செல்வது வழக்கம்.
மேலும் எகிப் நாட்டின் வருவாய்க்கு இந்த சுற்றுலாத்தலம் பெரிய பங்கு ஆற்றி வருகிறது. இந்நிலையில் செங்கடல் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு பேரை குறா கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரியாவைச் சேர்ந்த 68 வயது முதிய பெண் ஒருவர் கடலில் நீந்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சுறா ஒன்று அவரை தாக்கியது. அதனால் அவர் அலறியுள்ளார். பிறகு உடனே அந்த பெண்ணின் கை, காலை சுறா கடித்துத் துப்பியுள்ளது.
இதனால் அப்பகுதி முழுவதும் ரத்த வெள்ளமாக மாறியுள்ளது. பிறகு அங்கு வந்த கடற்கரை மீட்புக் குழுவினர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த கடற்கரை பகுதியில் இப்படி நடப்பது முதல்முறை அல்ல. இதற்கு முன்பும் ருமேனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சுறா கடித்து உயிரிழந்துள்ளார். மேலும் 2015,2018ம் ஆண்டில் செக்குடியரசை சேர்ந்த ஒருவரும், ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவரும் சுறாவிற்கு பலியாகியுள்ளனர்.
அடுத்தடுத்து சுறா கடித்து சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்த வரும் சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம்... மவுனம் காக்கும் தவெக அரசு; விளாசிய உதயநிதி ஸ்டாலின்!
-
“திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயமா?; தவெக அரசு வேடிக்கைப் பார்க்கலாமா?”: ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
சிங்கப்பெண் அதிரடிப்படையில் தேர்வான பெண் காவலருக்கு டார்ச்சர்? - இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார்!
-
”கூடிய ’GenZ DMK’ கொள்கைக் கூட்டம்.. தைரியமாக களமாடுங்கள் திமுக உங்களுடன் என தெம்பூட்டிய கழக சட்டத்துறை”
-
வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!