உலகம்
30 ஆண்டுகளாக கழிவறையில் ‘சுடச்சுட’ தயாரான சமோசா.. ஹோட்டலின் கொடூர செயலால் உணவுப் பிரியர்கள் அதிர்ச்சி!
சவூதி அரேபியா நாட்டில் உள்ள ஜெட்டா நகரில் பிரபலமான உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின் மீது அண்மைக் காலமாகச் சுகாதாரம் மற்றும் உணவுத்துறை அதிகாரிகளுக்குத் தொடர் புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து, உணவுத்துறை அதிகாரிகள் அதிரடியாக அந்த உணவகத்தில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த உணவகத்தின் கழிவறையில் 30 ஆண்டுகளாக சமோசா தயாரிக்கப்பட்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இரண்டு ஆண்டுகள் பழைய இறைச்சியை பதப்படுத்திப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மேலும் சமையல் அறையில் பூச்சிகள் மற்றும் எலிகள் காணப்பட்டுள்ளன. இதையடுத்து அதிகாரிகள் அந்த உணவகத்தைப் பூட்டி அதிரடியாக சீல் வைத்தனர். சவுதி அரேபியாவில் இப்படி உணவகம் சீல் வைப்பது இது முதல் முறையல்ல.
ஏற்கனவே இந்த ஜெட்டா நகரத்திலேயே செயல்பட்டு வந்த ஷவர்மா உணவகத்தில் எலிகள் காணப்பட்டதை அடுத்து உணவகம் மூடப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து சுகாதார அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்து 26 உணவகங்களை மூடியுள்ளனர். தற்போது மீண்டும் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்த உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
Also Read
-
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!
-
‘நாம் தான் வெல்வோம்’ என்ற எண்ணத்தை எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!
-
“கழக அரசு மீது களங்கம் ஏற்படுத்த நினைத்தால் அதனைப் பெண்களே ஏற்க மாட்டார்கள்!” : முரசொலி தலையங்கம்!