உலகம்
30 ஆண்டுகளாக கழிவறையில் ‘சுடச்சுட’ தயாரான சமோசா.. ஹோட்டலின் கொடூர செயலால் உணவுப் பிரியர்கள் அதிர்ச்சி!
சவூதி அரேபியா நாட்டில் உள்ள ஜெட்டா நகரில் பிரபலமான உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின் மீது அண்மைக் காலமாகச் சுகாதாரம் மற்றும் உணவுத்துறை அதிகாரிகளுக்குத் தொடர் புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து, உணவுத்துறை அதிகாரிகள் அதிரடியாக அந்த உணவகத்தில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த உணவகத்தின் கழிவறையில் 30 ஆண்டுகளாக சமோசா தயாரிக்கப்பட்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இரண்டு ஆண்டுகள் பழைய இறைச்சியை பதப்படுத்திப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மேலும் சமையல் அறையில் பூச்சிகள் மற்றும் எலிகள் காணப்பட்டுள்ளன. இதையடுத்து அதிகாரிகள் அந்த உணவகத்தைப் பூட்டி அதிரடியாக சீல் வைத்தனர். சவுதி அரேபியாவில் இப்படி உணவகம் சீல் வைப்பது இது முதல் முறையல்ல.
ஏற்கனவே இந்த ஜெட்டா நகரத்திலேயே செயல்பட்டு வந்த ஷவர்மா உணவகத்தில் எலிகள் காணப்பட்டதை அடுத்து உணவகம் மூடப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து சுகாதார அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்து 26 உணவகங்களை மூடியுள்ளனர். தற்போது மீண்டும் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்த உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
Also Read
-
“தமிழ்நாட்டின் இரயில்வே திட்டங்களுக்கான காலக்கெடு என்ன?” : நாடாளுமன்றத்தில் ஆ.இராசா எம்.பி கேள்வி!
-
“VB G RAM G மசோதா என்பது வளர்ச்சி பாரதம் இல்லை, விபரீத பாரதம்!”: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கண்டனம்!
-
“திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு மாபெரும் நற்சான்றுதான் 16% வளர்ச்சி!” : அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
2026 சட்டமன்றத் தேர்தல் : கனிமொழி MP தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு - தி.மு.க அறிவிப்பு!