உலகம்
30 ஆண்டுகளாக கழிவறையில் ‘சுடச்சுட’ தயாரான சமோசா.. ஹோட்டலின் கொடூர செயலால் உணவுப் பிரியர்கள் அதிர்ச்சி!
சவூதி அரேபியா நாட்டில் உள்ள ஜெட்டா நகரில் பிரபலமான உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின் மீது அண்மைக் காலமாகச் சுகாதாரம் மற்றும் உணவுத்துறை அதிகாரிகளுக்குத் தொடர் புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து, உணவுத்துறை அதிகாரிகள் அதிரடியாக அந்த உணவகத்தில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த உணவகத்தின் கழிவறையில் 30 ஆண்டுகளாக சமோசா தயாரிக்கப்பட்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இரண்டு ஆண்டுகள் பழைய இறைச்சியை பதப்படுத்திப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மேலும் சமையல் அறையில் பூச்சிகள் மற்றும் எலிகள் காணப்பட்டுள்ளன. இதையடுத்து அதிகாரிகள் அந்த உணவகத்தைப் பூட்டி அதிரடியாக சீல் வைத்தனர். சவுதி அரேபியாவில் இப்படி உணவகம் சீல் வைப்பது இது முதல் முறையல்ல.
ஏற்கனவே இந்த ஜெட்டா நகரத்திலேயே செயல்பட்டு வந்த ஷவர்மா உணவகத்தில் எலிகள் காணப்பட்டதை அடுத்து உணவகம் மூடப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து சுகாதார அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்து 26 உணவகங்களை மூடியுள்ளனர். தற்போது மீண்டும் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்த உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
Also Read
-
விதிமீறல்களுக்கு பெயர்போன பா.ஜ.க! : நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம்!
-
பாகிஸ்தான் உதவியை நாடும் பா.ஜ.க! : தேர்தல் விதிமுறைகளை தகர்க்கும் மோடி அரசு!
-
குற்றவாளிகளுக்கு தரப்படும் ஜாமீன், முதல்வர்களுக்கு மறுக்கப்படுகிறது : பா.ஜ.க.வின் அடக்குமுறை அரசியல்!
-
”திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் மனங்களில் தாண்டவமாடும் மகிழ்ச்சி” : கி.வீரமணி வாழ்த்து!
-
”அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய நினைக்கும் மோடி” : ராகுல் காந்தி தாக்கு!