உலகம்
சட்டவிரோத எண்ணெய் கிணறில் தீ விபத்து - உடல்கருகி 100க்கும் மேற்பட்டோர் பலி : நைஜீரியாவில் நடந்த பயங்கரம்!
நைஜீரியா நாட்டில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக எண்ணெய் சுரங்கங்கள் செயல்படுகிறது. பொருளாதார தாக்கதை சமாளிக்க முடியாத அந்நாட்டு அரசு, முடிந்த அளவு தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடாததன் விளைவாக, வறுமையின் காரணமாக அந்நாட்டு மக்கள் பலர் சட்டவிரோதமாக செயல்படும் எண்ணெய் சுரங்கங்களில் பணியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நைஜீரியாவின் தெற்கு மாநிலமான இமோவில் சட்ட விரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் அதிகளவில் உள்ளது.
இந்நிலையில், இமோவில் உள்ள சட்ட விரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நேற்றைய தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றன.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!