உலகம்
200 நாடுகள் தேடியும் சிக்காமல் இருந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன்.. காதலியால் சிக்கியது எப்படி?
மெக்சிகோவை சேர்ந்தவர் டொனாசியானோ ஓல்குயின் பெர்டுகோ. பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னனான இவரை 200க்கும் மேற்பட்ட நாடுகள் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளன. மேலும் 196 நாடுகள் அவரை கைது செய்வதற்கான இன்டர்போல் ரெட் வாரண்டை பிறப்பித்துள்ளன.
இப்படி உலக நாடுகளே தேடியும் சிக்காமல் போலிஸாருக்கு தண்ணி காட்டி வந்த டொனாசியானோ, அவரது நம்பிக்கைக்கு உரிய காதலி வெளியிட்ட ஒரே ஒரு புகைப்படத்தால் கையும் களவுமாக போலிஸாரிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.
கொலம்பிய நாட்டில் உள்ள கலியில் இருக்கும் மலை உச்சி பகுதியில் டோனாசியா தனது காதலியுடன் சொகுசு பங்களாவில் உற்காகமாக இருந்து வந்துள்ளார். அப்போது காதலர்கள் இருவரும் முத்தமிட்டு மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.
இந்தப் புகைப்படத்தை அவரது காதலி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலிஸார், கொலம்பிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து உடனே கொலம்பிய அதிகாரிகள் தலைமறைவாக இருந்து சொகுசு பங்களாவிலேயே டொனாசியானோ ஓல்குயின் பெர்டுகோ கைது செய்துள்ளனர். இதையடுத்து அவரை தங்களது நாட்டிற்கு கொண்டுவர அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது.
Also Read
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!
-
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தை சிதைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
வீட்டை விட்டு வெளியேறிய ரம்யா, வியானா : சாண்ட்ரா, கமரு, FJ -வை paint பூசி nominate செய்த housemates!
-
100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கும் ஒன்றிய அரசு : மாநிலங்களின் தலையில் கூடுதல் நிதிச்சுமை!
-
“We Will Never Allow You...” : பாசிச கலவர சக்திகளை குறிப்பிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி சூளுரை!