உலகம்
200 நாடுகள் தேடியும் சிக்காமல் இருந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன்.. காதலியால் சிக்கியது எப்படி?
மெக்சிகோவை சேர்ந்தவர் டொனாசியானோ ஓல்குயின் பெர்டுகோ. பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னனான இவரை 200க்கும் மேற்பட்ட நாடுகள் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளன. மேலும் 196 நாடுகள் அவரை கைது செய்வதற்கான இன்டர்போல் ரெட் வாரண்டை பிறப்பித்துள்ளன.
இப்படி உலக நாடுகளே தேடியும் சிக்காமல் போலிஸாருக்கு தண்ணி காட்டி வந்த டொனாசியானோ, அவரது நம்பிக்கைக்கு உரிய காதலி வெளியிட்ட ஒரே ஒரு புகைப்படத்தால் கையும் களவுமாக போலிஸாரிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.
கொலம்பிய நாட்டில் உள்ள கலியில் இருக்கும் மலை உச்சி பகுதியில் டோனாசியா தனது காதலியுடன் சொகுசு பங்களாவில் உற்காகமாக இருந்து வந்துள்ளார். அப்போது காதலர்கள் இருவரும் முத்தமிட்டு மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.
இந்தப் புகைப்படத்தை அவரது காதலி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலிஸார், கொலம்பிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து உடனே கொலம்பிய அதிகாரிகள் தலைமறைவாக இருந்து சொகுசு பங்களாவிலேயே டொனாசியானோ ஓல்குயின் பெர்டுகோ கைது செய்துள்ளனர். இதையடுத்து அவரை தங்களது நாட்டிற்கு கொண்டுவர அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது.
Also Read
-
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் : தேர்வு குழுவினருக்கு பதிலடி கொடுத்த நடராஜன் !
-
ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணியில் பிளவு? : பிரதமர் மோடியின் பேச்சால் வந்த சிக்கல்!
-
உணவக உரிமையாளரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி கைது : போலிஸ் அதிரடி
-
போலிஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டுப் பொய் புகார் : வசமாகச் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி!
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!