உலகம்
200 நாடுகள் தேடியும் சிக்காமல் இருந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன்.. காதலியால் சிக்கியது எப்படி?
மெக்சிகோவை சேர்ந்தவர் டொனாசியானோ ஓல்குயின் பெர்டுகோ. பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னனான இவரை 200க்கும் மேற்பட்ட நாடுகள் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளன. மேலும் 196 நாடுகள் அவரை கைது செய்வதற்கான இன்டர்போல் ரெட் வாரண்டை பிறப்பித்துள்ளன.
இப்படி உலக நாடுகளே தேடியும் சிக்காமல் போலிஸாருக்கு தண்ணி காட்டி வந்த டொனாசியானோ, அவரது நம்பிக்கைக்கு உரிய காதலி வெளியிட்ட ஒரே ஒரு புகைப்படத்தால் கையும் களவுமாக போலிஸாரிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.
கொலம்பிய நாட்டில் உள்ள கலியில் இருக்கும் மலை உச்சி பகுதியில் டோனாசியா தனது காதலியுடன் சொகுசு பங்களாவில் உற்காகமாக இருந்து வந்துள்ளார். அப்போது காதலர்கள் இருவரும் முத்தமிட்டு மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.
இந்தப் புகைப்படத்தை அவரது காதலி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலிஸார், கொலம்பிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து உடனே கொலம்பிய அதிகாரிகள் தலைமறைவாக இருந்து சொகுசு பங்களாவிலேயே டொனாசியானோ ஓல்குயின் பெர்டுகோ கைது செய்துள்ளனர். இதையடுத்து அவரை தங்களது நாட்டிற்கு கொண்டுவர அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது.
Also Read
-
இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!