உலகம்
“பாகிஸ்தான் ராணுவம் கொடுத்த 3 ஆப்ஷன்கள்.. எனது உயிருக்கு ஆபத்து” : உண்மையை போட்டு உடைத்த இம்ரான் கான்!
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த தீர்மானத்தின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது.
அதேவேளையில், இம்ரான் கான் அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துவிட்டது. மேலும் இம்ரான் கான் பதவியை ராஜினாமா செய்யவேண்டிய நிலை உருவாகியுள்ளது. மேலும் அடுத்த தேர்தலையும் அறிவிக்குமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், இம்ரான் கான் அளித்த பேட்டி ஒன்றில், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் அந்தப் பேட்டியில் கூறியிருப்பதாகவது, “எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. இதுகுறித்து நம்பகமான தகவல்கள் என்னிடம் உள்ளன. ஆனால் நான் அதற்காக பயப்படவில்லை. சுதந்திரமான, ஜனநாயக பாகிஸ்தானுக்காக தொடர்ந்து போராடுவேன்.
ராணுவம் எனக்கு 3 ஆப்ஷன்களை கொடுத்துள்ளது. நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்கொள்வது, முன்கூட்டியே தேர்தல் அல்லது ராஜினாமா செய்வது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!