உலகம்
30 ஆண்டுகள் கழித்து ஆசிரியரை பழிவாங்கிய மாணவன்.. 101 முறை கத்தியால் குத்தி கொடூர கொலை : ‘பகீர்’ காரணம்!
பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் மரியா வெர்லிண்டன் ஆண்ட்வெர்பில். ஆசிரியரான இவர் தனது வீட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு மர்மமான முறையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இந்தக் கொலை சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் ஒரு வருடமாகியும் கொலையை யார் செய்தது என்பதை போலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து போலிஸாருக்கு இந்த வழக்கு ஒரு சவாலாக மாறியது.
இந்நிலையில், உவென்ட்ஸ் என்ற வாலிபர் தான்தான் அந்த ஆசிரியரைக் கொலை செய்ததாகத் தனது நண்பரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து அந்த நபர் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலிஸார் உடனே உவென்ட்ஸை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறிய வாக்குமூலத்தைக் கேட்டு போலிஸாரே அதிர்ச்சியடைந்தனர்.
1990ஆம் ஆண்டு உவென்ட்ஸ், பள்ளியில் படித்தபோது அவருக்கு ஆசிரியராக இருந்துள்ளார் கொலை செய்யப்பட்ட மரியா வெர்லிண்ட். இவர் ஒரு நாள் உவென்ட்ஸை அவமானப்படுத்தியுள்ளார். இதற்காக ஆசிரியரை பழிவாங்க வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது வீட்டிற்குச் சென்று ஆசிரியரைக் கத்தியால் 101 முறை குத்தி கொலை செய்துள்ளார். இந்த வாக்குமூலத்தை அடுத்து போலிஸார் அவரை கைது செய்தனர். 30 ஆண்டுகள் கழித்து பாடம் எடுத்த ஆசிரியரை முன்னாள் மாணவர் கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும்: உறுதி செய்த Exit Polls முடிவுகள்!
-
இஸ்லாமியச் சிறுமிக்கு இந்து பெற்றோர் : உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!
-
பா.ஜ.க ஆளும் மாநிலத்தின் அவலம் - உயிருக்குப் போராடிய கணவர்: மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!
-
”தேர்தல் ஆணையமா ஆளுநர் ஆர்.என்.ரவி.. அமைதியாக நடக்கிறதா மேற்கு வங்க தேர்தல்?” : முரசொலி கேள்வி!
-
கோடை வெப்பத்தைத் தணிக்கச் சட்டைப் பையில் வெங்காயம் : ஒன்றிய அமைச்சரின் மூடநம்பிக்கை!