உலகம்
அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 17 நாடுகளை 'Unfriend’ செய்த ரஷ்யா... காரணம் என்ன?
ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொண்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்குவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 12வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
போரை நிறுத்துமாறு பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தாலும் ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதனையடுத்து உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ரஷ்யா மீது அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் பொருளாதார தடை விதித்தன.
மேலும், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் விவகாரத்தில் ஐ.நா.,வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதில் ரஷ்யாவிற்கு எதிராகவும் சில நாடுகள் வாக்களித்தன.
இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா, உக்ரைன், கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சிங்கப்பூர், ஜப்பான், நார்வே, தென்கொரியா, தைவான், ஐஸ்லாந்து, மொனாக்கோ, மாண்டினீக்ரோ, நியூசிலாந்து, சான் மரினோ உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.
Also Read
-
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தை சிதைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
வீட்டை விட்டு வெளியேறிய ரம்யா, வியானா : சாண்ட்ரா, கமரு, FJ -வை paint பூசி nominate செய்த housemates!
-
100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கும் ஒன்றிய அரசு : மாநிலங்களின் தலையில் கூடுதல் நிதிச்சுமை!
-
“We Will Never Allow You...” : பாசிச கலவர சக்திகளை குறிப்பிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி சூளுரை!
-
புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக.. தமிழ்நாடு ஹஜ் இல்லம் : நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்