உலகம்
4 நாளிலேயே அகதிகளான 3.68 லட்சம் உக்ரைன் மக்கள்: தீவிரமடையும் உக்ரைன் - ரஷ்யா போர்!
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் 4வது நாளாகத் தாக்குதல் தொடுத்துவருகிறது. இதன்காரனமாக உக்ரைன் மக்கள் கண்ணீருடன் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
மேலும் தொடர் குண்டு சத்தம் கேட்டுக்கொண்டே இருப்பதால் உக்ரைன் மக்கள் மெட்ரோ ரயில்நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.ரஷ்யாவுடனான போரில் இதுவரை 4300 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என உக்ரைனின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் தெரிவித்துள்ளார்
உக்ரைனில் உள்ள கீவ், கார்கிவ், சும நகரங்களில் சண்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதனால் அப்பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து ரஷ்யாவின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒப்புக்கொண்டுள்ளார். இதன் காரணமாக விரைவில் உக்ரைன் ரஷ்ய அதிகாரிகள் பெலாரஸில் பேச்சு வார்த்தையில் ஈடுபட உள்ளனர். இதில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த போர் காரணமாக உக்ரைன் நாட்டிலிருந்து 3.68 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா அதிகாரிகள் முகாமை தெரிவித்துள்ளது.
Also Read
-
"வள்ளுவரை திருடப்பார்க்கிறர்கள், வள்ளுவரின் வெப்பம் அவர்களை பொசுக்கிவிடும்" - முதலமைச்சர் ஆவேசம் !
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !