உலகம்
மது குடித்ததால் கைது செய்யப்பட்ட பிரதமரின் வளர்ப்பு மகன்.. ஒரே நாளில் விடுதலை : எங்கு தெரியுமா?
பாகிஸ்தானில் உள்ள கடாபி ஸ்டேடியம் அருகே வந்த காரை நிறுத்தி போலிஸார் சோனை செய்தனர். அப்போது காரில் இருந்த மூன்று பேரிடமும் மதுபானம் இருந்ததை அடுத்து போலிஸார் அவர்களைக் கைது செய்தனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட மூன்று பேரில் ஒருவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வளர்ப்பு மகன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலிஸார் கைது செய்தபோது நான் பிரதமரின் மகன் என அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் உயர் அதிகாரிகளின் உத்தரவை அடுத்து கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் அன்றைய தினமே போலிஸார் விடுவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூசா மனேகா, இம்ரான் கானின் மூன்றாவது மனைவியின் வளர்ப்பு முகன் ஆவார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 1995ஆம் ஆண்டு பிரிட்டனை சேர்ந்த ஜெமீகா கோல்டுஸ்மித்தை திருமணம் செய்து 2004ஆம் ஆண்டு விவிகரத்து பெற்றார். பின்னர் ரேஹம் கானை திருமணம் செய்து ஒரே ஆண்டில் விவகாரத்து செய்தார்.
இதையடுத்து மூன்றாவதாக புஷ்ரா பீவிகான் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இவருக்குப் பிறந்த மகன்தான் மூசா மனேகா. பாகிஸ்தான் நாட்டில் மதுபானம் விற்பதும், குடிப்பதும் சட்டவிரோதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!