உலகம்
பெற்றோரை சுட்டுக்கொன்று 3 நாட்கள் சடலத்துடன் வசித்த சிறுவன்: ஸ்பெயினில் நடந்த கொடூரம்; பின்னணி என்ன?
வேட்டையாடும் துப்பாக்கியால் தனது தாய், தந்தை, சகோதரனை சுட்டுக் கொன்ற 15 வயது சிறுவனை ஸ்பானிஷ் போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணை வெளிவந்த தகவல்:
பள்ளி பாடங்களில் குறைவான மதிப்பெண் பெற்றதால் தனது மகனை தண்டிக்கும் வகையில் வீட்டில் இணையதள வசதிகளை பயன்படுத்தக் கூடாது என தாய் ஒருவர் கட்டுப்பாடு விதித்திருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த 15 வயது சிறுவன், வீட்டில் இருந்த விலங்குகளை வேட்டையாடும் துப்பாக்கியை எடுத்து தாயையும் அவரது சகோதரனையும் சுட்டிருக்கிறார்.
அந்த சமயம் பார்த்து வந்த தனது தந்தையையும் நெஞ்சிலேயே குறி வைத்து சுட்டிருக்கிறார் அந்த சிறுவன். அதன் பிறகு செய்வதறியாது மூன்று நாட்களாக அவர்களது சடலத்தோடே இருந்திருக்கிறார்.
எதேர்ச்சையாக அண்டைவீட்டைச் சேர்ந்தவர் சிறுவனின் குடும்பத்தார் குறித்து விசாரித்ததும் உண்மை தெரிய வந்திருக்கிறது.
அதன் பிறகு போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உயிரிழந்தவர்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த சம்பவம் ஸ்பெயின் நாட்டின் அலிகன்டெவில் உள்ள எல்சி (elche) என்ற பகுதியில் கடந்த செவ்வாய் அன்று நடந்திருக்கிறது.
சிறுவனின் செயலால் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள் என ஆங்கில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளது.
Also Read
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!