உலகம்
“கண்டுபிடித்த 10 வாரங்களில் 9 கோடி பாதிப்பு.. ஒமைக்ரானை குறைத்து மதிப்பிடக்கூடாது”: பீதியை கிளப்பும் WHO!
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 381,675,279 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 57.02 லட்சத்தை தாண்டியது. அதேவேளையில், தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் கொரோனா பாதிப்பு குறைந்து உருமாற்றமடைந்த பாதிப்பு அதிகமான வேளையிலும் இந்தியா உட்பட பல நாடுகள் கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளன.
இதனால் நோய்த் தொற்றின் பாதிப்பு மேலும் மேலும் அதிகரிக்கும் என்ற தீவிரத் தன்மையை உலக நாடுகள் உணரவேண்டும் உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் உருமாற்றமடைந்த ஒமைக்ரானை குறைத்து மதிப்பிடக்கூடாது என உலக சுகாதார அமைப்பின் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் செயலாளர் டெட்ரோஸ் அதானம் கூறுகையில், “குறைந்த பாதிப்புகளைக் கொடுப்பதால் ஒமைக்ரானை வேரியன்ட்டை குறைத்து மதிப்பிடக்கூடாது.
பல நாடுகளில் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. 10 வாரங்களுக்கு முன்புதான் ஒமைக்ரான் வேரியன்ட்டின் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை கிட்டத்தட்ட 90 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுகள் பதிவாகியுள்ளது. இத்தகைய சூழலில், தடுப்பூசி வந்துவிட்டதால், வைரஸ் பரவுவதை தவிர்க்கவேண்டிய அவசியமில்லை என சில நாடுகள் நினைப்பது கவலையளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!