உலகம்
தடுப்பூசி செலுத்தாதவர்கள் வெளியே வந்தால் உடனே கைது.. அதிரடி உத்தரவிட்ட அதிபர் - எந்த நாடு தெரியுமா?
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் மட்டும் தினந்தோறும் 8 லட்சத்திற்கும் அதிகமாகத் தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது.
இதேபோன்று இந்தியா, பிரிட்டன், பிலிப்பைன்ஸ், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அதேநேரம் புதிதாகக் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்றும் உலகம் முழுவதும் பரவி வருகிறது.
இதனால் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பெரிதாக கொரோனா தொற்றால் பாதிப்படையாததால், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தடுப்பூசி செலுத்தாதவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தால் உடனே கைது செய்யப்படுவார்கள் என பிலிப்பைன்ஸ் நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட், "பிலிப்பைன்ஸில் ஒமைக்ரான் தீவிரமாகப் பரவுகிறது. இதனால் அவசர நிலை நிலவுகிறது. முதல் டோஸ் தடுப்பூசிகூட போடாத மக்கள் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். விதிமுறையை மீறினால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!