உலகம்
மனைவி விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்.. மகனை வெட்டி கொலை செய்த கணவன்: இத்தாலியில் கொடூர சம்பவம்!
இத்தாலி நாட்டின் வரீஸ் மாகாணம் மொராசோனின் கம்யூன் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் பைடோனி. இவரது மனைவி விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
இதனால் இருவரும் தனித்தனியாக வாழ்த்து வருகிறார்கள். இந்த தம்பதிகளின் ஏழு வயது சிறுவன் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். மேலும் நண்பர் ஒருவரைக் கத்தியால் குத்திய வழக்கில் டேவிட் பைடோனி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தனது மகனுடன் புத்தாண்டு கொண்டாட விரும்புகிறேன் என டேவிட் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து சிறுவன் தனது தந்தை வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது வீட்டிற்கு வந்த மகனை டேவிட் சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் மனைவியின் வீட்டிற்குச் சென்று மகனை அழைத்து வந்துள்ளதாக கூறி அவரையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து போலிஸார் தலைமறைவாக இருந்த டேவிட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!