உலகம்
மனைவி விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்.. மகனை வெட்டி கொலை செய்த கணவன்: இத்தாலியில் கொடூர சம்பவம்!
இத்தாலி நாட்டின் வரீஸ் மாகாணம் மொராசோனின் கம்யூன் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் பைடோனி. இவரது மனைவி விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
இதனால் இருவரும் தனித்தனியாக வாழ்த்து வருகிறார்கள். இந்த தம்பதிகளின் ஏழு வயது சிறுவன் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். மேலும் நண்பர் ஒருவரைக் கத்தியால் குத்திய வழக்கில் டேவிட் பைடோனி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தனது மகனுடன் புத்தாண்டு கொண்டாட விரும்புகிறேன் என டேவிட் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து சிறுவன் தனது தந்தை வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது வீட்டிற்கு வந்த மகனை டேவிட் சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் மனைவியின் வீட்டிற்குச் சென்று மகனை அழைத்து வந்துள்ளதாக கூறி அவரையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து போலிஸார் தலைமறைவாக இருந்த டேவிட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
ரூ.265.50 கோடி : 9371 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
டித்வா புயலால் பாதித்த இலங்கை : 950 மெட்ரிக் டன் நிவாரண பொருட்களை அனுப்பிவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மதக்கலவரத்தை தடுக்க சக்கர வியூகத்தை உருவாக்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : அமைச்சர் சேகர்பாபு பேட்டி!
-
“ஆதிக்கமற்ற சமத்துவ சமுதாயத்தை அமைத்தே தீருவோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்கள்.. இலங்கை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தமிழ்நாடு: நெகிழ்ச்சி சம்பவம்!