உலகம்
மனைவி விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்.. மகனை வெட்டி கொலை செய்த கணவன்: இத்தாலியில் கொடூர சம்பவம்!
இத்தாலி நாட்டின் வரீஸ் மாகாணம் மொராசோனின் கம்யூன் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் பைடோனி. இவரது மனைவி விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
இதனால் இருவரும் தனித்தனியாக வாழ்த்து வருகிறார்கள். இந்த தம்பதிகளின் ஏழு வயது சிறுவன் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். மேலும் நண்பர் ஒருவரைக் கத்தியால் குத்திய வழக்கில் டேவிட் பைடோனி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தனது மகனுடன் புத்தாண்டு கொண்டாட விரும்புகிறேன் என டேவிட் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து சிறுவன் தனது தந்தை வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது வீட்டிற்கு வந்த மகனை டேவிட் சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் மனைவியின் வீட்டிற்குச் சென்று மகனை அழைத்து வந்துள்ளதாக கூறி அவரையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து போலிஸார் தலைமறைவாக இருந்த டேவிட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!