உலகம்
அதிகமாக சாப்பிட்டதால் நஞ்சான மருந்து... 20 ஆண்டுகளில் 10 லட்சம் பேர் உயிரிழப்பு: அமெரிக்காவில் அதிர்ச்சி!
அமெரிக்காவில் கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரை அதிக அளவு மருந்து எடுத்துக் கொண்டதால் 9 லட்சத்து 32 ஆயிரத்து 364 பேர் உயிரிழந்துள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் 20 ஆண்டுகளில் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையோரே அதிகமாக உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் அமெரிக்காவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட கொரோனா மரணங்களைக் காட்டிலும் இது அதிகமாகும். அதாவது அமெரிக்காவில் 8 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ஆனால், அதிகமாக மருந்து உட்கொண்டவர்களில் 9 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2021ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும். இதனால் மருந்துகளை அளவுக்கு அதிகம் எடுத்துக் கொண்டதன் விளைவாக 10 லட்சம் பேர் உயிரிழந்திருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதியை எப்போது விடுவிப்பீர்கள்? கேள்விகளை அடுக்கிய தி.மு.க எம்.பிக்கள்!
-
“வரலாற்றில் இடம்பிடித்த சிலை…மார்க்ஸை வடிவமைக்கும் போது பூரித்தேன்” : நெகிழ்ந்த சிற்பி கார்த்திகேயன்!
-
U19 உலகக்கோப்பை: சூர்ய வம்சியின் அதிரடி ஆட்டம்! இங்கிலாந்திற்கு 411 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயம்!
-
6 புதிய சமத்துவபுரங்கள்: சாலை, பாலங்கள்- புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.348.59 கோடி செலவில் அரசு மருத்துவமனை கட்டடங்கள்: மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் முதலமைச்சர்!