உலகம்
மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு.. மண்ணில் புதைந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் நிலை என்ன?
மியான்மர் நாட்டில் கச்சின் மகாணத்தில் பச்சைக் கற்கள் வெட்டும் சுரங்கம் உள்ளது. இங்கு தொழிலாளர்கள் வழக்கம்போல் இன்று கற்கள் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பணியிலிருந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
இந்த நிலச்சரிவு சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 25 தொழிலாளர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.
மேலும், மண்ணுக்கு அடியில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மியான்மரில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இது மூன்றாவது நிலச்சரிவு சம்பவமாகும். 2019ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 54 பேர் உயிரிழந்தனர். அதேபோல் 2020ஆம் ஆண்டு நிலச்சரிவில் சிக்கி 160 பேர் உயிரிழந்தனர். இப்போது ஏற்பட்டுள்ள நிலச்சரிவிலும் 100க்கும் மேல் உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Also Read
-
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!
-
‘நாம் தான் வெல்வோம்’ என்ற எண்ணத்தை எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!
-
“கழக அரசு மீது களங்கம் ஏற்படுத்த நினைத்தால் அதனைப் பெண்களே ஏற்க மாட்டார்கள்!” : முரசொலி தலையங்கம்!