உலகம்
அரசின் திடீர் அறிவிப்பை கண்டித்து வீதிக்கு வந்த இத்தாலி மக்கள் : காரணம் என்ன?
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிராகப் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்துவதற்கான பல்வேறு முற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இத்தாலி நாட்டின் ரோம் நகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக பணியிடங்களில் கொரோனா 'ஹெல்த் பாஸ்' திட்டம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பை அடுத்து பொதுமக்கள் பாராளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்று அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது பொதுமக்கள் மீது போலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விரட்டியடித்தனர். இருந்தபோதும், ஹெல்த் பாஸ் திட்டத்தைக் கைவிட வேண்டும் என மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். முன்னதாக முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே ஹெல்த் பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், திடீரென அனைத்து பணியிடங்களிலும் ஹெல்த் பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இதைக் காட்டாத தொழிலாளர்கள் ஊதியம் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என இத்தாலி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத்தாலி அரசின் திடீர் அறிவிப்பு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதன் ஒரு பகுதியாகத்தான் ரோம் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி பேரணியாகப் பாராளுமன்றம் நோக்கிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் போராட்டத்தால் இத்தாலி அரசுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Also Read
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!
-
“தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி!” : முதலீடுகளை ஈர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
தொடர்ந்து 4 நாட்களாக சசிகாந்த் உண்ணாவிரத போராட்டம்.. முதலமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க போராட்டம் முடிவு!
-
"நயினார் நாகேந்திரன் தேவையில்லாமல் வாயை கொடுத்து மாட்டிக்கொள்கிறார்" - அமைச்சர் TRB ராஜா பதிலடி !