உலகம்
US Army கட்டுப்பாட்டுக்குள் காபூல் ஏர்போர்ட்.. அமெரிக்காவின் உதவியை நாடிய இந்தியா? ஆப்கனில் நடப்பது என்ன?
தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான் வந்ததைத் தொடர்ந்து எதாவது ஒரு விமானத்தில் ஏறி தப்பிக்க முடியுமா என்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காபூல் விமான நிலையத்துக்குள் புகுந்ததால் விமான நிலையம் முழுமையாக முடங்கியது.
இதனால் அமெரிக்கா, இந்தியா உள்பட 60 நாடுகளின் குடிமக்களை மீட்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. அவர்களை மீட்கும் விதமாக அமெரிக்க ராணுவம் களமிறங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு காபூல் விமான நிலையத்தின் ஓடுதளம் அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
விமான நிலையத்துக்கு வெளியே கூடியுள்ள மக்களையும் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் தொடர்கின்றன. எனவே ராணுவ விமானங்கள் மூலம் வெளிநாட்டு குடிமக்களை மீட்கும் நடவடிக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காபுல் இந்திய தூதரகத்தில் தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் என்று பல இந்தியர்கள் சிக்கியுள்ளனர்.
இது தவிர பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மேலும் பலர் வேறு இடங்களில் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனைவரையும் அழைத்து வருவதற்கு இந்தியா அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உதவும் வகையில் தொலைபேசி எண், இ மெயில் விபரங்களை இந்திய வெளி உறவுத்துறை வெளியிட்டுள்ளது.
நேற்று முன் தினம் ஏர் இந்தியா மற்றும் சி17 விமானம் மூலம் பலர் மீட்டு வரப்பட்டனர். மேலும், ஒரு ராணுவ விமானம் காபுலில் தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்கிற விபரங்களை அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“100 கி.மீ தூரத்திற்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம்!” : கிருஷ்ணகிரியில் துணை முதலமைச்சர் உரை!
-
“தி.மு.க. செய்த சாதனை என்ன என்பதை மக்கள் சொல்வார்கள்!” : பிரதமர் மோடிக்கு முரசொலி தலையங்கம் பதிலடி!
-
பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை மற்றும் ஓய்வூதிய உயர்வு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!