உலகம்
‘சார்ஜ்’ போட்ட செல்போன் குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்து இளம்பெண் பலி!
ரஷ்யாவின் கிரோவோ-செபேட்ஸ்க் நகரைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் எவ்ஜீனியா சுல்யாதியேவா. இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் (செப்டம்பர் 17) குளிப்பதற்காக தனது வீட்டில் உள்ள குளியல் அறைக்குள் சென்றார் சுல்யாதியேவா.
குளியலறையின் குளியல் தொட்டியில் தண்ணீரை நிரப்பிவிட்டு, அதன் அருகில் இருக்கும் மின்சார பெட்டியில் தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார் அவர். பின்னர் குளியல் தொட்டிக்குள் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது சார்ஜ் போடப்பட்டிருந்த அவரது செல்போன் குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளது. அதனால், தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து சுல்யாதியேவாவின் உடலிலும் மின்சாரம் பாய்ந்தது.
இதற்கிடையே தனது மகள் குளியலறைக்குள் சென்று நீண்டநேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த சுல்யாதியேவாவின் தாய் உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு சுல்யாதியேவா குளியல் தொட்டிக்குள் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதைக் கண்டு அவரது தாய் அதிர்ச்சியில் உறைந்தார். செல்போன் மூலம் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அம்மோனியா வாயுக் கசிவு: “எந்தவொரு சமரசத்திற்கும் இந்த அரசு இடம் கொடுக்கக் கூடாது” - உதயநிதி வலியுறுத்தல்!
-
“ஏ.. எடு.. எடு..” -சேலம் பேருந்து நிலையத்தில் பெண்களிடம் மாமூல்.. அட்ராசிட்டியில் ஈடுபடும் தவெக நிர்வாகி!
-
திருவள்ளூர் அம்மோனியா வாயுக் கசிவு : 2 பேர் பலி... 50-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை - விவரம்!
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!