உலகம்
‘சார்ஜ்’ போட்ட செல்போன் குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்து இளம்பெண் பலி!
ரஷ்யாவின் கிரோவோ-செபேட்ஸ்க் நகரைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் எவ்ஜீனியா சுல்யாதியேவா. இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் (செப்டம்பர் 17) குளிப்பதற்காக தனது வீட்டில் உள்ள குளியல் அறைக்குள் சென்றார் சுல்யாதியேவா.
குளியலறையின் குளியல் தொட்டியில் தண்ணீரை நிரப்பிவிட்டு, அதன் அருகில் இருக்கும் மின்சார பெட்டியில் தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார் அவர். பின்னர் குளியல் தொட்டிக்குள் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது சார்ஜ் போடப்பட்டிருந்த அவரது செல்போன் குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளது. அதனால், தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து சுல்யாதியேவாவின் உடலிலும் மின்சாரம் பாய்ந்தது.
இதற்கிடையே தனது மகள் குளியலறைக்குள் சென்று நீண்டநேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த சுல்யாதியேவாவின் தாய் உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு சுல்யாதியேவா குளியல் தொட்டிக்குள் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதைக் கண்டு அவரது தாய் அதிர்ச்சியில் உறைந்தார். செல்போன் மூலம் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
உதயநிதி ஏற்படுத்திய எழுச்சி : தனக்குத் தானே ‘சூனியம்' வைத்துக் கொண்ட முதலமைச்சர் விஜய்!
-
“தவெக ஆதரவு.. அமைச்சர் பதவி ஆசை.. ராஜினாமா செய்ய வைகோ நிர்பந்தித்தார்” : மதிமுக எம்.எல்.ஏ-க்கள் பேட்டி!
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!