உலகம்
‘சார்ஜ்’ போட்ட செல்போன் குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்து இளம்பெண் பலி!
ரஷ்யாவின் கிரோவோ-செபேட்ஸ்க் நகரைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் எவ்ஜீனியா சுல்யாதியேவா. இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் (செப்டம்பர் 17) குளிப்பதற்காக தனது வீட்டில் உள்ள குளியல் அறைக்குள் சென்றார் சுல்யாதியேவா.
குளியலறையின் குளியல் தொட்டியில் தண்ணீரை நிரப்பிவிட்டு, அதன் அருகில் இருக்கும் மின்சார பெட்டியில் தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார் அவர். பின்னர் குளியல் தொட்டிக்குள் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது சார்ஜ் போடப்பட்டிருந்த அவரது செல்போன் குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளது. அதனால், தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து சுல்யாதியேவாவின் உடலிலும் மின்சாரம் பாய்ந்தது.
இதற்கிடையே தனது மகள் குளியலறைக்குள் சென்று நீண்டநேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த சுல்யாதியேவாவின் தாய் உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு சுல்யாதியேவா குளியல் தொட்டிக்குள் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதைக் கண்டு அவரது தாய் அதிர்ச்சியில் உறைந்தார். செல்போன் மூலம் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
விதிமீறல்களுக்கு பெயர்போன பா.ஜ.க! : நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம்!
-
பாகிஸ்தான் உதவியை நாடும் பா.ஜ.க! : தேர்தல் விதிமுறைகளை தகர்க்கும் மோடி அரசு!
-
குற்றவாளிகளுக்கு தரப்படும் ஜாமீன், முதல்வர்களுக்கு மறுக்கப்படுகிறது : பா.ஜ.க.வின் அடக்குமுறை அரசியல்!
-
”திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் மனங்களில் தாண்டவமாடும் மகிழ்ச்சி” : கி.வீரமணி வாழ்த்து!
-
”அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய நினைக்கும் மோடி” : ராகுல் காந்தி தாக்கு!