உலகம்
இங்கே இந்தியை திணிக்கும் வேளையில், ஆஸ்திரேலியாவில் பயிற்று மொழியாகிறது தமிழ்!
இந்தியாவில் இந்தியை திணிக்க பா.ஜ.க அரசு முயற்சிகள் மேற்கொண்டு வரும் வேளையில், ஆஸ்திரேலியாவில் தமிழ் மொழியை பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் தலைநகரான சிட்னியில் 39 சதவிகிதத்துக்கும் மேல் வெளிநாட்டவர்கள் வசித்து வருகின்றனர். ஆகையால் பன்மொழி கொண்ட நாடாக ஆஸ்திரேலியா அமையவேண்டும் என்ற நோக்கில் உலகளவில் அதிகமாகப் பேசக்கூடிய மொழியாக உள்ள தமிழை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதனையொட்டி, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு, அடுத்த கல்வி ஆண்டு முதல் தமிழ் மொழி இரண்டாவது மொழியாக கற்றுத்தரப்படும் என அறிவித்துள்ளது. இதுகுறித்த புதிய பாடத்திட்டத்தையும் அம்மாகாண அரசு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், தமிழ், இந்தி, பஞ்சாபி, பெர்சியன், மெக்டோனியன் ஆகிய 5 மொழிப்பாடங்களை சேர்க்க என்.எஸ்.வி அரசு முடிவெடுத்துள்ளது. இதில் 1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் மொழி இரண்டாவது பாடமாகப் பயிற்றுவிக்கப்பட உள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!