உலகம்
தங்கப் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய இளவேனில் : முறையான வரவேற்பு தராத தமிழக அரசு !
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவு 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்தார்.
20 வயதே ஆன தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் கடந்தாண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதலில் தங்கம் வென்றிருந்தார். இந்நிலையில், சீனியர் பிரிவில் பங்கேற்ற முதல் சர்வதேச தொடரிலேயே தங்கம் வென்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் இளவேனில். இளவேனில் வாலறிவனுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இளவேனில் வாலறிவன் போட்டிகளை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்பினார். அப்போது அவரை வரவேற்கத் தமிழக அரசு சார்பாகவோ, ரைபிள் கிளப் சார்பாகவோ யாரும் செல்லாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவரை வரவேற்க அவரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே வந்திருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''தங்கப்பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் இதற்கு பிறகு இளம் வீரர்கள் உருவாக வாய்ப்புள்ளது. எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி'' தெரிவித்தார்.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!