உலகம்
காஷ்மீர் விவகாரத்தில் நான் பஞ்சாயத்து செய்யமாட்டேன் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல்டி !
ஜி-7 மாநாடு பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. ஜி-7 மாநாட்டில் இந்தியா உறுப்பினராக இல்லை. இருப்பினும், இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்குமாறு மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்து இருந்தார்.
மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மோடி, காஷ்மீர் விவகாரம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பிரச்சனை. அவை குறித்து வேறு எந்த நாட்டையும் அனுமதிப்பது இல்லை என தெரிவித்தார்.
பின்னர் பேசிய டிரம்ப், காஷ்மீர் விவகாரம் குறித்து நாங்கள் பேசினோம். காஷ்மீரில் நிலமை கட்டுப்பாட்டில் உள்ளதாக மோடி உணர்கிறார். காஷ்மீர் பிரச்சனை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகள் இடையேயான பிரச்சனை. இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது பிரச்னைகளை தாங்களே பேசி தீர்த்து கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் இருந்தே காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என மீண்டும் மீண்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிவந்த நிலையில், இன்று காஷ்மீர் விவகாரம் இருநாடுகளுக்கு இடையேயான பிரச்சனை என அந்தர் பல்டி அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !