உலகம்
லண்டன் ஐகோர்ட் தீர்ப்பால் மல்லையாவை நாடு கடத்துவதில் சிக்கல் நீடிப்பு!
முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக விளங்கிய விஜய் மல்லையா இந்தியாவின் பல்வேறு வங்கிகளில், ரூபாய் 9,000 கோடிக்கு மேல் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் இந்தியாவிலிருந்து தப்பி லண்டனில் வசித்து வருகிறார்.
விஜய் மல்லையாவை நாடு கடத்தக் கோரி, இந்தியா தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் கடந்த ஆண்டு டிசம்பரிலேயே அவரை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால், மல்லையா தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்குகளால் தாமதம் ஏற்பட்டது.
மல்லையா தொடர்ந்த பல மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடியான நிலையில், லண்டன் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மல்லையா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிளேர் மாண்ட்கோமெரியின் வாதங்களைக் கேட்ட நீதிமன்ற அமர்வு, நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு அனுமதி வழங்குவதாகத் தெரிவித்தது.
மல்லையாவின் மனு நிராகரிக்கப்பட்டால் 28 நாட்களுக்குள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் சூழல் இருந்த நிலையில், லண்டன் உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் இந்திய அரசுத் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வருவதில் சிக்கல் நீடிக்கிறது.
Also Read
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
-
சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!
-
SIR பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இதுவே நோக்கம்... புட்டுப்புட்டு வைத்த முரசொலி தலையங்கம்!
-
‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிதியை 34% குறைத்தது ஏன்?: ராஜாத்தி சல்மா எம்.பி கேள்வி!