உலகம்
ரோஹிங்யா முஸ்லீம்கள் கொலை பற்றி செய்தி வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட நிருபர்கள் விடுதலை!
மியான்மரில் 10 ரோஹிங்யா முஸ்லீம்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி செய்தி வெளியிட்டதால் 2017 டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட வா லோன், கியாவ் சோ ஓ என்ற இரண்டு ராய்ட்டர்ஸ் நிருபர்கள் 500 நாட்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அரசின் ரகசிய ஆவணங்களை திருடி வெளியிட்டதாகக் கூறி அவர்களுக்கு கடந்தாண்டு மியான்மரின் யங்கூன் மாவட்ட நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ராய்ட்டர்ஸ் நிருபர்களின் கைதுக்கு ஐ.நா அமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் 500 நாட்களுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி நல்லெண்ண அடிப்படையில் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மனித உரிமைகள் ஆணையத்தின் தலையீடு, உலக நாடுகளின் அழுத்தம் மற்றும் மியான்மரின் ஜனநாயக அணுகுமுறை காரணமாக அவரகள் 500 நாட்களில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த இருவருக்கும் பத்திரிக்கை துறையின் உயரிய விருதான புலிட்சர் விருது கடந்த மே மாதம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!