உலகம்
ரோஹிங்யா முஸ்லீம்கள் கொலை பற்றி செய்தி வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட நிருபர்கள் விடுதலை!
மியான்மரில் 10 ரோஹிங்யா முஸ்லீம்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி செய்தி வெளியிட்டதால் 2017 டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட வா லோன், கியாவ் சோ ஓ என்ற இரண்டு ராய்ட்டர்ஸ் நிருபர்கள் 500 நாட்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அரசின் ரகசிய ஆவணங்களை திருடி வெளியிட்டதாகக் கூறி அவர்களுக்கு கடந்தாண்டு மியான்மரின் யங்கூன் மாவட்ட நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ராய்ட்டர்ஸ் நிருபர்களின் கைதுக்கு ஐ.நா அமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் 500 நாட்களுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி நல்லெண்ண அடிப்படையில் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மனித உரிமைகள் ஆணையத்தின் தலையீடு, உலக நாடுகளின் அழுத்தம் மற்றும் மியான்மரின் ஜனநாயக அணுகுமுறை காரணமாக அவரகள் 500 நாட்களில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த இருவருக்கும் பத்திரிக்கை துறையின் உயரிய விருதான புலிட்சர் விருது கடந்த மே மாதம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!
-
ரேபிஸ் மரணங்களுக்கு தீர்வு என்ன? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய ஆ.ராசா MP!