உலகம்
ரோஹிங்யா முஸ்லீம்கள் கொலை பற்றி செய்தி வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட நிருபர்கள் விடுதலை!
மியான்மரில் 10 ரோஹிங்யா முஸ்லீம்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி செய்தி வெளியிட்டதால் 2017 டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட வா லோன், கியாவ் சோ ஓ என்ற இரண்டு ராய்ட்டர்ஸ் நிருபர்கள் 500 நாட்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அரசின் ரகசிய ஆவணங்களை திருடி வெளியிட்டதாகக் கூறி அவர்களுக்கு கடந்தாண்டு மியான்மரின் யங்கூன் மாவட்ட நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ராய்ட்டர்ஸ் நிருபர்களின் கைதுக்கு ஐ.நா அமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் 500 நாட்களுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி நல்லெண்ண அடிப்படையில் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மனித உரிமைகள் ஆணையத்தின் தலையீடு, உலக நாடுகளின் அழுத்தம் மற்றும் மியான்மரின் ஜனநாயக அணுகுமுறை காரணமாக அவரகள் 500 நாட்களில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த இருவருக்கும் பத்திரிக்கை துறையின் உயரிய விருதான புலிட்சர் விருது கடந்த மே மாதம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“இந்த வெற்றிக்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றி” - தங்கம் வென்ற கபடி வீரர்கள் நெகிழ்ச்சி!
-
தென்காசி பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.. பரப்பப்படும் வதந்தி... உண்மை என்ன? - TN Fact Check விளக்கம்!
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!
-
“மணத்தி கணேசன் தொடங்கி கார்த்திகா வரை...” பெருமை கொள்ளும் தமிழ்நாடு - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!