Viral
விரைவில் முக்கிய அறிவிப்பு : இந்தியாவை பரபரப்பாக்கிய Hindenburg!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் போது, பொருளாதாரம் கடுமையாக சரிந்தது. இந்த சரிவில் இருந்து இன்னும் கூட மீள முடியாமல் இந்தியா தவித்து வருகிறது. மேலும் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் லட்சம் பேர் வேலை இழந்து வீதிக்கு வந்தனர்.
ஆனால் அதானி குழும நிறுவனத்தின் வருவாய் மட்டும் கணிசமாக உயர்ந்தது. இது எப்படி? என அப்போதே ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்துதான் அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்த ஹிண்டன்பர்க் அறிக்கையை அடுத்து அதானி நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக சரிந்தது. மேலும் நாடாளுமன்றத்திலும் ஹிண்டன்பர்க் அறிக்கை விவாதபொருளாக மாறியது.
அதோடு உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டன. ஹிண்டன்பர்க் அறிக்கையை கொண்டு செபி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பான செபி விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தியா சம்பந்தப்பட்ட முக்கிய அறிக்கையை வெளியிடப் போவதாக பிரபல பங்குச்சந்தை ஆய்வு அமைப்பான ஹிண்டன்ஸ் பர்க் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து யார் முறைகேடு குறித்து ஹிண்டன்ஸ்பர்க் வெளியிட போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!